விளையாட்டு

நந்த்ரே பர்கருக்கு அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ: ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான நந்த்ரே பர்​கருக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ராஜஸ்​தான் ராயல்ஸ் - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதின. இதில் ராஜஸ்​தான் அணி​யின் இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான நந்த்ரே பர்​கர் ஐபிஎல் நன்​னடத்தை விதி 2.5-ஐ மீறிய​தால் அவருக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு தகு​தி​யிழப்பு புள்​ளி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஐபிஎல் நன்​னடத்தை விதி 2.5 என்​பது போட்​டி​யின் போது எதிரணி​யின் வீரரை இழி​வுபடுத்​தும் வித​மாகவோ அல்​லது அவரை ஆக்​ரோஷ​மாகத் தூண்​டும் வித​மாகவோ மொழி, செயல் அல்​லது சைகைகளைப் பயன்​படுத்​துதல் தொடர்​பான​தாகும்​.

SCROLL FOR NEXT