அமெரிக்கா - ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து பாக். அமைச்சர் - அமெரிக்க தூதர் ஆலோசனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்​சு​வார்த்தை ஏற்​பாடு செய்​வதற்​கான முயற்​சிகள் குறித்து பாகிஸ்​தான் அமைச்​சரும், பாகிஸ்​தானுக்​கான அமெரிக்கத் தூதரும் இஸ்​லா​மா​பாத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடுத்​தன. ஈரானின் ராணுவ இலக்​கு​களைக் குறி வைத்து தாக்​குதல் நடத்​தின. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதன் காரண​மாக சர்​வ​தேச சந்​தை​யில் எரிபொருள் விலை கடுமை​யாக உயர்ந்​தது.

அதன்​பின் 2 வாரங்​களுக்கு முன்பு போர் நிறுத்த அறி​விப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் இறங்​கியது. அதன்​படி நடை​பெற்ற முதல் கட்ட பேச்​சு​ வார்த்தை கடந்த 11 மற்​றும் 12-ம் தேதி​களில் நடை​பெற்​றது. ஆனால், முடிவு எது​வும் எட்​டப்​ப​டா​மல் தோல்​வியடைந்​தது.

இந்​நிலை​யில் 2 வார கால போர் நிறுத்​தம் கடந்த புதன் கிழமை முடிந்​தது. அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை ஏற்​பாடு செய்​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் இறங்​கியது. இதனால் போர் நிறுத்​தத்​தைக் கால​வரையறை​யின்றி நீட்​டிப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.

இந்​நிலை​யில் அமெரிக்கா - ஈரான் இடையே இந்த வார இறு​தி​யில், 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கான முயற்​சிகள் குறித்து பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சர் மொசின் நக்​வி, பாகிஸ்​தானுக்​கான அமெரிக்க தூதர் நடாலி பேக்​கரை இஸ்​லா​மா​பாத்​தில் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது மேற்​காசிய நில​வரம், 2-ம் கட்ட பேச்​சு​வார்த்​தைக்​குத் தூதரக அளவி​லான முயற்​சிகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அமெரிக்க அதிபர் ட்ரம் அறி​வித்த போர் நிறுத்த நீட்​டிப்​பை, ‘வர​வேற்​கத்​தக்க முன்​னேற்​றம்’ என நக்வி தெரி​வித்​தார். இருதரப்பு இடையே அமை​தி​யான தீர்வு ஏற்பட பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்​றும் ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் அனைத்து முயற்​சிகளும் எடுக்​கின்​றனர். இந்த 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை எப்​போது நடை​பெறும் என தெரிய​வில்லை. எனினும், நல்ல செய்தி வரும். 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை இன்று (வெள்​ளி) நடை​பெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்​துள்​ளார்​.

சீன தூதர் சந்​திப்பு: இதற்கிடையே, பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பை, பாகிஸ்​தானுக்​கான சீன தூதர் ஜியாங் ஜைதாங் நேற்று சந்​தித்​தார். அப்​போது பாகிஸ்​தான் துணை பிரதமரும் மற்​றும் வெளி​யுறவுத் துறை அமைச்​சரு​மான இஷாக் தர் உட்பட பலர் இருந்​தனர். இந்​தச் சந்​திப்பு குறித்து பாகிஸ்​தான் பிரதமர் அலு​வல​கம் விடுத்த அறிக்​கை​யில் கூறிய​தாவது: மேற்கு ஆசியா நில​வரம் குறித்​து, பாகிஸ்​தான் மேற்​கொண்டு வரும் அமைதி முயற்​சிகள் குறித்து சீன தூதர் ஜியாங் கேட்​டறிந்​தார்.

மேற்கு ஆசி​யா​வில் அமை​தியை ஏற்​படுத்த பாகிஸ்​தான் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளை அவர் பாராட்​டி​னார். பாகிஸ்​தான் - சீன உறவு​கள் முன்​னேற்ற பாதை​யில் சென்று கொண்​டிருப்​பது குறித்து பாகிஸ்​தான் பிரதமர் திருப்தி தெரி​வித்​தார். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்: மும்பையை துவம்சம் செய்த சிஎஸ்கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in