விளையாட்டு

ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி தோல்வி

செய்திப்பிரிவு

அனந்தபூர்: ஆந்​திர மாநிலம் அனந்​த​பூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்​பந்து போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று தமிழ்​நாடு அணி, மணிப்​பூருடன் மோதி​யது.

இதில் தமிழ்​நாடு அணி 1-2 என்ற கோல் கணக்​கில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தது. நிர்​ண​யிக்​கப்​பட்ட நேரத்​தில் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலை​யில் இருந்​தது. மணிப்​பூர் அணி தரப்​பில் 66-வது நிமிடத்​தில் செஞ்​ஜம் ஆல்வா தேவி கோல் அடித்தார்.

தமிழ்​நாடு அணி சார்​பில் 84-வது நிமிடத்​தில் அன்​விதா ரகு​ராமன் கோல் அடித்​தார். இதையடுத்து கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் 111-வது நிமிடத்​தில் மணிப்​பூர் அணி​யின் சிங்க்​ஹ​மா​யும் ரெடிமா தேவி கோல் அடித்து அசத்​தி​னார். இது அணி​யின் வெற்றி கோலாக அமைந்​தது.

SCROLL FOR NEXT