ஹோ சி மின் சிட்டி: வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை இஷாராணி பரூவா முன்னேறியுள்ளார். வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர்பிரிவு அரை இறுதிச் சுற்றில் இஷாராணி பரூவா 21-10, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் சகநாட்டு வீராங்கனை ரக்சிதா ஸ்ரீராம்ராஜை வீழ்த்தினார்.
மற்றொரு அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை சருண்ராக் விடிட்சர்ன் 21-19, 22-20 என்ற கணக்கில் இந்தியாவின் தன்வி சர்மாவைத் தோற்கடித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் 13-21, 8-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹெங்கிடம் வீழ்ந்தார்.