விளையாட்டு

“கிடைக்​கும் வாய்ப்​பு​களை ரிங்கு சிங் பயன்​படுத்​திக் கொள்​ள வேண்​டும்” - இர்​பான் பதான் யோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனக்கு கிடைக்​கும் வாய்ப்​பு​களை கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி (கேகேஆர்) வீரர் ரிங்கு சிங் பயன்​படுத்​திக் கொள்​ளவேண்​டும் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் இர்​பான் பதான் யோசனை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து இர்​பான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசி​ய​தாவது: ரிங்கு சிங் ஒரு மிகச்​சிறந்த வீரர் என்​பதை நாம் அனை​வரும் அறிவோம். பல ஐபிஎல் ஆட்​டங்​களில் அவர் அதிரடி​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி இருக்​கிறார்.

          

கடந்த ஐபிஎல் சீசனில் அவர் ஃபார்ம் சரி​யில்​லை. 2023 சீசனில் அவர் அபார​மாக விளை​யாடி​னார். இந்த சீசனில் தனக்​குக் கிடைக்​கும் வாய்ப்​பு​களை அவர் சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​ளவேண்​டும். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்​பை​யில் அவர் தனக்​குக் கிடைத்த வாய்ப்​பு​களை முழு​மை​யாக பயன்​படுத்​த​வில்​லை. எனவே, வரும் ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்​கை, கொல்​கத்தா அணி எவ்​வாறு பயன்​படுத்​தப் போகிறது என்​ப​தைப் பார்க்​கவேண்​டும்.

நடந்து முடிந்த உலகக் கோப்​பை​யில் வருண் சக்​ர​வர்த்​தி​யின் ஃபார்ம் சரி​யாக இல்​லை. வரும் ஐபிஎல் சீசனில் அவர் எவ்வாறு செயல்பட போகிறார் என்​ப​தைப் பார்க்க ஆவலாக இருக்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT