ஹர்​திக் பாண்டியா

 
விளையாட்டு

ஐபிஎல் தொடர் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக மாறிவிட்டது: சொல்கிறார் ஹர்​திக் பாண்டியா

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 147 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கார்​பின் போஷ் 32, கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா 26, திலக் வர்மா 20, சூர்​யகு​மார் யாதவ் 15, ரோஹித் சர்மா 15 ரன்​கள் சேர்த்​தனர்.

148 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 148 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. மணிஷ் பாண்டே 45, ரோவ்​மன் பவல் 40 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

கொல்​கத்தா அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை பெற்று 6-வது இடத்​துக்கு முன்​னேறி உள்ளது.

அதேவேளை​யில் ஏற்​கெனவே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்ட மும்பை அணிக்கு இது 9-வது தோல்​வி​யாக அமைந்​தது. 13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 9 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் மும்பை அணி​யின் கேப்டன ஹர்​திக் பாண்​டியா கூறிய​தாவது: பேட்​டிங் குழு​வாக, நாங்​கள் 20 ரன்​கள் குறை​வாக எடுத்​து​விட்​டோம். பவர்​பிளே​யில் அதிக விக்​கெட்​டு​களை இழந்​து​விட்​டோம். திலக் வர்​மா​வும், நானும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளை​யாடி​யிருந்​தா​லும், மேலும் சில பார்ட்​னர்​ஷிப்​களை அமைத்​திருந்​தா​லும் 15-20 ரன்​களை கூடுதலாக எடுத்​திருக்க முடி​யும். இது நிகழ்ந்​திருந்​தால் எங்​களுக்கு வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு இருந்​திருக்​கும்.

இந்த சீசன் முழு​வதும், நாங்​கள் ஃபீல்​டிங்​கில் மிக​வும் மோச​மாகவே செயல்​பட்​டுள்​ளோம். நாங்​கள் நிறைய கேட்​ச்களைக் கோட்டை விட்​டுள்​ளோம், இதை நிச்​சய​மாக யாரும் வேண்​டுமென்றே செய்ய விரும்​புவ​தில்​லை. ஆனால், ஆட்​டத்​தின் அந்​தப் பகு​தி​யில் இருந்து தப்​பித்து ஓட முடி​யாது. வெற்றி பெற வேண்​டும் என்​றால், கிடைக்​கும் வாய்ப்​பு​களை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

கடின​மான கேட்​ச்களாக இருந்​தா​லும் கூட பிடித்​தாக வேண்​டும். ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றக்​கூடிய கேட்​ச்களை தவற​விட்​டால் எப்​போதும் போட்​டி​யில் பின்​தங்​கியே இருக்க நேரிடும். மேலும் போட்​டி​யில் போராட வேண்​டிய நிலைக்​குத் தள்​ளப்​படு​வோம்.

பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மாக இருக்​கும் இது​போன்ற ஆடு​களத்​தில் விளை​யாடு​வதை நான் பொருட்​படுத்​து​வ​தில்​லை. ஏனெனில் ஐபிஎல் தொடர் முற்​றி​லும் பேட்​டிங்​கிற்கு சாதக​மான ஒன்​றாக மாறி வரு​கிறது. இதனால் பந்​து​வீச்​சாளர்​கள் தங்​களால் அணிக்கு உதவ முடிய​வில்​லை என உணர்​கிறார்​கள்​. இவ்​வாறு ஹர்​தி​க் பாண்டியா கூறினார்.

அபராதம் விதிப்பு: இந்த ஆட்​டத்​தின் 2-வது இன்​னிங்​ஸின்போது 10-வது ஓவரை மும்பை அணி​யின் கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா வீசி​னார்.

அப்​போது 4-வது பந்தை வீசுவதற்​காக தனது பகு​திக்கு சென்று கொண்​டிருந்தபோது ஸ்டெம்​பின் மேலிருந்த பெயில்​ஸ்​களை தட்​டி​விட்​டார். இது ஐபிஎல் நன்​னடத்தை விதி 2.2-ன்​படி குற்​ற​மாகும். இதனால் ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு ஒரு தகுதி இழப்​புப் புள்​ளி​யும் போட்​டி​யின் ஊதி​யத்​தில் இருந்து 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT