விளையாட்டு

சென்னையில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பள்​ளி​களுக்கு இடையி​லான கால்பந்து போட்டி ஜனவரி 9-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்​தப் போட்​டியை சென்னை கால்​பந்து சங்​கம் நடத்​துகிறது. இந்​தப் போட்​டிக்கு சிஎப்​ஏ-​திலக் மோதி யுசி பள்​ளி​களுக்கு இடையி​லான கால்​பந்​துப் போட்டி என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை பெரியமேட்​டிலுள்ள ஜவஹர்​லால் நேரு மைதானத்​துக்கு அரு​கிலுள்ள கண்​ணப்​பர் திடலில் போட்​டிகள் நடத்​தப்​படும். போட்​டி​யில் வெல்​லும் அணிக்கு கேர்​டு​கேதர் கோப்பை பரி​சாக வழங்​கப்​படும்.

​போட்​டி​யில் எம்​சிசி மேல்​நிலைப்​பள்​ளி, மாதவரம் அரசு மேல்​நிலைப்​பள்​ளி, எழும்​பூர் டான் பாஸ்​கோ, ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்​ளி, செயின்ட் பீட்ஸ் சிபிஎஸ்இ பள்​ளி, செயின்ட் பாட்​ரிக்ஸ் மேல்​நிலைப்​பள்​ளி, மதரஸா-இ-ஆசம் மேல்​நிலைப்​ பள்​ளி, பவன்ஸ் ராஜாஜி, மணலி அரசு மேல்​நிலைப்​பள்​ளி, எம்​சிசி மெட்​ரிக் மேல்​நிலைப்​பள்​ளி, செயின்ட் பீட்ஸ் மேல்​நிலைப்​பள்​ளி, பெரம்​பூர் டான் பாஸ்கோ ஆகிய பள்​ளி​களைச் சேர்ந்த அணி​கள் பங்​கேற்​க​வுள்​ளன.

இதுத​விர சென்னை கால்​பந்து சங்​கம் சார்​பில் நடை​பெறும் 2, 3, 4-வது டிவிஷன் கால்​பந்​துப் போட்​டிகளும் ஜனவரி 9-ம் தேதி முதல் தொடங்​க​வுள்​ளன. சென்னை கால்​பந்து சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் இத்​ தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT