திருவனந்தபுரம்: சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த 4-வது வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிகழ்த்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 27 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த வரிசையில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 10,868 ரன்கள் குவித்து முதலிடத்தையும், நியூஸிலாந்தின் சுசி பேட்ஸ் 10,652 ரன்கள் குவித்து 2-ம் இடத்தையும், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் குவித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஸ்மிருதி மந்தனா 10,053 ரன்களுடன் 4-ம் இடத்தில் உள்ளார்.