விளையாட்டு

ஷுப்​மன் கில் காயத்​தால் அவதி

செய்திப்பிரிவு

லக்னோ: இந்​திய டி20 கிரிக்​கெட் அணி​யின் துணை கேப்​ட​னான ஷுப்​மன் கில் காயம் அடைந்​துள்​ள​தால் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தொடரின் எஞ்​சிய ஆட்​டங்​களில் இருந்து வில​கக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 ஆட்​டங்​களி​லும் ஷுப்​மன் கில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. இந்​தத் தொடரில் அவர், கூட்​டாக 32 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தார். இந்​நிலை​யில் 4-வது போட்​டிக்​காக ஷுப்​மன் கில் லக்னோ மைதானத்​தில் தீவிர வலை பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்த போது கால் விரலில் காயம் அடைந்​தார். விரல் பகு​தி​யில் வலி​யும், வீக்​க​மும் உள்​ளது.

இதனால் அவர், தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டி20 தொடரின் எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. காயம் காரண​மாக நேற்று 4-வது டி20 போட்டி நடை​பெற்ற லக்னோ மைதானத்​துக்கு ஷுப்​மன் கில் இந்திய அணி​யுடன் செல்​ல​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT