ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருண் வாசு
சென்னை: ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலைவராக இந்திய அலைச்சறுக்கு சங்கத்தின் தலைவரான அருண் வாசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அலைச்சறுக்கு கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் வாயிலாக அருண் வாசு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வின்ட் அலைச்சுறுக்கு மற்றும் அலைச்சறுக்கு வீரராக விளங்கும் அருண் வாசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய அலைச்சறுக்கு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதும், ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.