விளையாட்டு

“நாங்கள் சிறப்பாக விளையாடினால் யாராலும் எங்களை தடுக்க முடியாது” - திலக் வர்மா

செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மும்பை அணி திலக் வர்மா 45 பந்​துகளில் விளாசிய 101 ரன்​கள் உதவியுடன் 199 ரன்​கள் குவித்​தது. 200 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் அணி​யானது 15.5 ஓவர்​களில் 100 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்​தது. இந்த வெற்றியின் வாயி​லாக மும்பை அணி தொடர்ச்​சி​யான 4 தோல்வி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தது.

ஆட்ட நாயகன் விருது வென்ற திலக் வர்மா கூறிய​தாவது: இந்த வெற்றி எனக்​கும், எனது அணிக்​கும் மிக​வும் முக்​கிய​மானது. கடந்த நான்கு அல்​லது ஐந்து போட்​டிகளாக, எனது மனதில் தொடர்ந்து ஓடிக்​கொண்​டிருந்த ஒரே விஷ​யம் என்​னவென்​றால், நான் களத்​தில் அதிக நேரம் செல​விட​வில்லை என்​பதும், போதிய பந்​துகளைச் சந்​திக்​க​வில்லை என்​பதும்​தான்.

எனவே, ஆடு​களத்​தில் சிறிது நேரம் நிலைத்து நின்று விளை​யாடி, அதன் பிறகு அணி​யின் சூழலுக்கு ஏற்ப எனது ஆட்​டத்தை மாற்​றியமைப்​பதே எனது இலக்​காக இருந்​தது. மும்பை இந்​தி​யன்ஸ் அணி அகம​தா​பாத்​துக்கு வரும்​போதெல்​லாம், அவர்​கள் வழக்​க​மாக எங்​களுக்கு ஒரு கருப்பு மண் ஆடு​களத்​தையே வழங்​கு​கிறார்​கள்.

இது இயல்​பாகவே சற்று வேகம் குறைந்​த​தாக இருக்​கும். எங்​களது பேட்​டர்​களால் அதற்கு ஏற்ப மாற முடி​யாது என்பதல்ல, ஆனால் ஆடு​களத்​தில் கூடு​தல் பவுன்ஸ் இருந்தால் எங்​களால் என்ன செய்ய முடி​யும் என்​பது எங்களுக்கு நன்றாகத் தெரி​யும். ஆடு​களம் மெது​வாக​வும், பந்து குறைவாக எகிறி வந்​த​தா​லும் நாங்​கள் அதற்கு ஏற்றவாறு எங்களை மாற்​றிக்​கொண்டு பந்​துகளை நேராக அடிக்க முயற்​சிக்க வேண்​டி​யிருந்​தது.

பந்து பவுன்ஸ் ஆகாத​தால் ஸ்டெம்​பிற்கு நேராக வரும் பந்துகளை குறுக்​காக விளை​யாடு​வது ஆபத்​தானது என்று தோன்​றியது. எனவே, பந்​துகளை நேராக அடிக்க முடிவு செய்​தேன். ஆடு​களத்​தின் தன்​மையை என்​னால் சரி​யாகக் கணிக்க முடிந்​தது. நல்​ல​வேளை​யாக, என்​னால் ரன்​கள் குவிக்க முடிந்​தது. தனிப்​பட்ட முறை​யில், எனக்கு 3-வது இடத்​தில் களமிறங்கி பேட்​டிங் செய்​வது மிக​வும் பிடிக்​கும். இருப்​பினும், அணிக்​குத் தேவை​யான எந்த இடத்​தி​லும் விளை​யாடு​வ​தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனென்​றால், சிறு​வய​திலிருந்தே எந்த வரிசை​யிலும் நம்பிக்​கை​யுடன் விளை​யாடும் வகை​யிலேயே நான் பயிற்சி எடுத்​துள்​ளேன். ஆட்​டம் நான் நினைத்​த​படியே அமைந்​த​தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்​சி. இருப்​பினும், எதிர்காலத்​தைப் பற்றி இப்​போதே அதி​கம் யோசிக்​காமல், ஒவ்​வொரு போட்​டி​யாகக் கவனம் செலுத்த வேண்​டும். இனி வரும் ஒவ்​வொரு போட்​டி​யும் எங்​களுக்கு ஏறக்குறைய நாக்​-அவுட் போட்​டியைப் போன்​றது​தான்.

எங்​கள் அணி​யின் திறன் என்ன என்​பது எங்​களுக்கு நன்றாகத் தெரி​யும். உலகக்​கோப்பை வென்ற பல வீரர்​கள் அணி​யில் உள்​ளனர். எங்​களிடம் உள்ள அபார​மான திறமை​களை வைத்து எங்​களால் என்ன செய்ய முடி​யும் என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம். நாங்​கள் திட்ட​மிட்​டபடி சரி​யாகச் செயல்​பட்​டால், எங்​களை யாராலும் தடுக்க முடி​யாது. எனவே, அடக்​கத்​துட​னும் கவனத்​துட​னும் இருந்து தொடர்ந்து கடின​மாக உழைப்​பது மிக​வும்​ முக்​கி​யம்​. இவ்​வாறு திலக்​ வர்​மா கூறி​னார்.

SCROLL FOR NEXT