வைபவ் சூர்​ய​வன்ஷி

 
விளையாட்டு

“பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: பந்​து​வீச்​சாளர்​களை பார்த்து விளை​யாடு​வது இல்லை, மட்​டைக்கு வரும் பந்​துகளை மட்​டுமே கவனித்து விளையாடு​கிறேன் என ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் 15 வயதான அதிரடி தொடக்க பேட்​ஸ்​மேன் வைபவ் சூர்​ய​வன்ஷி தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணிக்கு எதிராக 202 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 202 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. வைபவ் சூர்​ய​வன்ஷி 26 பந்​துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்​டரி​களு​டன் 78 ரன்​கள் விளாசினார்.

          

நடப்பு சீசனில் மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு எதி​ராக முதல் பந்​திலேயே சிக்​ஸர் விளாசி அசத்தியிருந்த வைபவ் சூர்​ய​வன்​ஷி, ஆர்​சிபி அணிக்கு எதி​ராக ஆஸ்​திரேலி​யா​வின் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​து​வீச்சை பதம் பார்த்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்​ய​வன்ஷி கூறிய​தாவது:

பயிற்​சி​யில் நான் என்ன செய்​கிறேனோ அதையே போட்​டி​யின் போதும் செய்ய முயற்​சிக்​கிறேன். தேவை​யில்​லாமல் எதை​யும் கூடு​தலாகச் செய்​யாமல், எனது இயல்​பான ஆட்​டத்தை நம்பி விளை​யாடு​கிறேன். புவனேஷ்வர் குமார், ஜஸ்​பிரீத் பும்​ரா, ஜோஷ் ஹேசில்​வுட் என யார் பந்து வீசுகிறார்​கள் என்​பது மனதின் ஒரு ஓரத்​தில் இருக்​கத்​தான் செய்​கிறது.

ஆனால் நான் பந்து வீச்​சாளரைப் பார்க்​காமல், வரும் பந்தை மட்டும் பார்த்து எனது ஆட்​டத்தை விளை​யாட முயற்​சிக்​கிறேன். இவ்​வாறு வைபவ்​ சூர்​யவன்​ஷி கூறி​னார்​.

SCROLL FOR NEXT