விளையாட்டு

அழுத்தமான சூழ்நிலையில் அசத்துவது எப்படி? - மனம் திறக்கும் விராட் கோலி

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ராய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி அணி. இந்த ஆட்​டத்​தில் 193 ரன்​கள் இலக்கை விரட்​டிய ஆர்​சிபி அணி 19.1 ஓவரில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 194 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

தொடக்க வீர​ரான விராட் கோலி 60 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 105 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்கிய பங்கு வகித்​தார். முன்​ன​தாக அவர், 21 ரன்​களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ரோவ்​மன் பவல் தவற​விட்​டிருந்​தார். இதற்​கான பலனை கொல்​கத்தா அணி அனுப​வித்​தது. ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு இது 9-வது சதமாக அமைந்​தது. கடந்த 2024-ம் ஆண்டு சீசனுக்கு பின்​னர் அவர், தற்​போது​தான் சதம் அடித்​துள்​ளார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறிய​தாவது: கடந்த இரண்டு போட்​டிகளில் என்​னால் அதிக ரன்​கள் எடுக்க முடியவில்லை என்​பது என்னை ஒரு​விதத்​தில் உறுத்​திக்​கொண்டே இருந்​தது. என்​னால் சிறப்​பாக விளை​யாட முடி​யும் என்பதும், பந்​துகளை சரி​யாக எதிர்​கொள்​கிறேன் என்​பதும் எனக்குத் தெரி​யும்​. ஆ​னால், ஆட்​டத்தை இறு​திவரை எடுத்​துச் செல்​லாமல், அணிக்​கான அந்​தத் தாக்​கத்தை நாம் ஏற்​படுத்​த​வில்லை என்று தெரிய​வரும்​போது அது மனதை வருத்​துகிறது. ஏனென்​றால் இத்​தனை ஆண்​டு​களாக இதுவே எனது இலக்​காக இருந்து வரு​கிறது.

களத்​தில் விளை​யாடும்​போது அணிக்​காகச் சிறந்த பங்​களிப்பை அளிக்​க​வும், தாக்​கத்தை ஏற்​படுத்​த​வும் என்​னைத் தொடர்ந்து மேம்​படுத்​திக் கொள்​வதே எனது நோக்​கம். சதம் அடித்த பிறகு பெரிய அளவில் கொண்​டாட​வில்​லை. அணிக்​காக அதி​கப் பங்களிப்பை வழங்க வேண்​டும் என்​பதே இலக்​காக இருந்​தது. அழுத்​தம் என்​பது ஒரு வரம் என்று மக்​கள் சொல்​வதற்கு ஒரு காரணம் இருக்​கிறது. அது உங்​களை அடக்​கத்​துடன் இருக்க வைக்​கும்.

ஆரோக்​கிய​மான அழுத்​தம் எப்​போதும் உங்​கள் ஆட்​டத்தை மேம்​படுத்த உதவும். சில போட்​டிகள் நீங்​கள் நினைத்​த​படி அமை​யாத​போது, ஒரு​வித பதற்​றம் ஏற்​படும். அந்​தப் பதற்​றம் உங்​களுக்கு உதவும்.நான் எதை​யும் அதீத​மாக செய்​யாமல் எனது இயல்​பான ஆட்​டத்​தின் மீது மட்​டுமே கவனம் செலுத்​தினேன். பந்​தின் நீளத்தைக் கணிப்​ப​தி​லும், எனக்​குக் கிடைத்த இடைவெளி​களில் பந்​துகளை அடிப்​ப​தி​லும் கவன​மாக இருந்​தேன்.

எனது ஆட்​டத்தை என்​னால் முழு​மை​யாக நம்பி விளை​யாட முடிந்தது மகிழ்ச்​சி​யளிக்​கிறது. தற்​போதும் உலகின் மிகச்​சிறந்த வீரர்​களுக்கு எதி​ராகப் போட்​டி​யிடு​வதை நான் பெரு​மை​யாகக் கருதுகிறேன். ஒரு நாள் இந்த பயணம் முடிவுக்கு வரும் என்​ப​தால், ஒவ்​வொரு முறை​யும் களத்​தில் எனது இதயத்​தை​யும் ஆன்மாவையும் கொடுத்து விளை​யாடு​கிறேன்.

கிடைக்​கும் வாய்ப்​பு​களை நான் மிகச்​சிறப்​பாகப் பயன்​படுத்​திக் கொள்ள விரும்​பு​கிறேன். அழுத்​த​மான சூழ்​நிலைகளை நான் ஆவலோடு எதிர்​பார்க்​கிறேன். அங்கு நில​வும் சவாலான நேரங்களில் அதையெல்​லாம் தாண்டி சாதிக்க வேண்​டும் என்று எனக்கு நானே சவால் விடுத்​துக் கொள்​கிறேன். விளை​யாட்டு பல பாடங்​களைக் கற்​றுக்​கொடுக்​கிறது.

அழுத்​தத்​தின் கீழ் செயல்​படும்​போது​தான் உங்​கள் குணா​திச​யம் செதுக்​கப்​படு​கிறது. இத்​தனை ஆண்​டு​களுக்​குப் பிறகும், இந்த ஆட்​டத்​தின் மீது எனக்கு இருக்​கும் காதல் குறைய​வில்​லை. பேட்டின் நடுப்​பகு​தி​யில் பந்து படும்​போது கிடைக்​கும் அந்த மகிழ்ச்சி இப்​போதும் எனக்​குள் இருக்​கிறது. இவை அனைத்​தும் கடவுளின் அருள். அதற்​காக நான் நன்​றி​யுட​னும் மனநிறைவுடனும்​ இருக்​கிறேன்​. இவ்​வாறு வி​ராட்​ கோலி கூறினார்​.

SCROLL FOR NEXT