விளையாட்டு

தமிழ்​நாடு யு-20 கால்​பந்து அணிக்கு நிதி மறுப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலை​யிட கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: விவே​கானந்தா கால்​பந்து கோப்​பைக்​கான போட்டியில் பங்​கேற்​கச் செல்​லும் தமிழ்​நாடு 20 வயதுக்​கு உட்பட்டோர்​ (​யு-20) கால்​பந்து அணிக்கு நிதி மறுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விஷ​யத்​தில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணையம்​(எஸ்​டிஏடி) தலை​யிட திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகத்​தின் செயலர் எஸ்​.சண்​முகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறியுள்​ள​தாவது: அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம்​(ஏஐஎஃப்​எஃப்) சார்​பில் மாணவர், மாணவி​கள், இளம் கால்​பந்து வீரர், வீராங்கனை​களுக்​காக 13, 15, 20 வயதுக்​குட்​பட்​டோர், சீனியர்​பிரிவு சந்தோஷ் டிராபி, ராஜ்​மாதா ஜீஜா​பாய் டிராபிக்​கான மகளிர் சீனியர் தேசிய அளவி​லான கால்​பந்​துப் போட்​டிகள் ஆண்​டு​தோறும் நடத்தப்​படு​கின்​றன. இந்​தப் போட்​டிகளில் பங்​கேற்று விளை​யாடு​வது இளம் வீரர்​களின் விளை​யாட்டு வாழ்க்​கை, கல்​வி, வேலை​வாய்ப்பு முன்​னேற்​றத்​துக்கு மிக​வும் முக்​கிய​மான​தாகும். குறிப்பாக வயது வரம்பு கொண்ட போட்​டிகளில் ஒரு வருடம் விளையாட வாய்ப்பு கிடைக்​கா​விட்​டால், அடுத்த ஆண்டு அதே வயது பிரி​வில் பங்​கேற்க இயலாது.

தமிழ்​நாடு கால்​பந்து கழகத்​துக்​காக முன்​னாள் நீதிபதி ஏ.கே.​ராஜன் தலை​மை​யில் நியமிக்​கப்​பட்ட நிர்​வாகக்​குழு கடந்த காலங்​களில் 20 வயதுக்​குட்​பட்​டோர் விவே​கானந்தா கோப்பை போட்​டிக்கு தமிழக அணியை அனுப்​புவ​தில் தேவை​யான நடவடிக்கை எடுக்​க​வில்​லை. போட்​டிக்கு செல்ல நிதி இல்லை என்று தெரிவிக்​கப்​பட்​ட​தால் வீரர்​கள் பாதிக்​கப்​படும் நிலை ஏற்பட்​டது.

இதையடுத்து திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகத்​தின் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து நீதி​மன்ற உத்​தர​வின்​படி தமிழ்​நாடு அணியை போட்டிக்கு அனுப்பி வைத்​தோம். அந்த அணி​யில் விளை​யாடிய வீரர்​கள் பின்​னர் தேசிய அளவி​லான சந்​தோஷ் டிராபி போட்​டி​யில் விளை​யாடினர்.

ஆனால், நீதி​மன்ற உத்​தர​வின்​படி அணி சென்று வருதல் உள்​ளிட்​ட​வற்​றுக்​காக செல​விடப்​பட்ட தொகை இன்று வரை தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தால்​​(எஸ்​டிஏடி), எங்​களுக்கு திருப்ப வழங்​கப்​பட​வில்​லை.

இதே நிலை இந்த ஆண்​டும் தொடர்​கிறது. 20 வயதுக்​குட்​பட்ட வீரர்​கள் கொண்ட தமிழ்​நாடு அணி ஐஎஸ்​எல், தேசிய லீக் போன்ற போட்​டிகளுக்கு முன்​னேறு​வதற்கு இத்​தகைய தேசிய போட்​டிகள் முக்​கிய வாயி​லாக உள்​ளன. இந்த வாய்ப்பை மறுப்​பது, வீரர்​களின் விளை​யாட்டு வாழ்க்​கை, கல்​வி, வேலை​வாய்ப்​புக்கு பெரும் பா​திப்பை ஏற்​படுத்​தும்.

எனவே, தமிழ்​நாடு கால்​பந்து நிர்​வாகக் குழு​வும், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​ய​மும் உடனடி​யாக தேவை​யான நடவடிக்​கை எடுத்​து 20 வயதுக்​குட்​பட்​ட வீரர்​களின்​ எதிர்​காலத்​தை பாது​காக்​கவேண்​டும்​.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT