விளையாட்டு

‘குடிசையிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு..!’ - வியக்க வைக்கும் ஒடிசா சிறுமியின் வெற்றிப்பயணம்

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: குடிசை​யில் பிறந்த பழங்​குடி​யினச் சிறுமி தனது அயராத முயற்​சி​யால் குடியரசுத் தலை​வர் மாளி​கைக்​குச் சென்று தேசிய சிறார் விருதை வென்று சாதித்​துள்​ளார்.

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்​டம் பெகெட்டா என்ற குக்​கி​ராமத்​தைச் சேர்ந்​தவர் ஜோஷ்னா சபர். பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த இவரது தந்தை கிர்த்​தன் சபர், தாய் காசமெரி சபர் ஆகியோர் கூலி வேலை செய்து வரு​கின்​றனர்.

ஏழ்​மை​யில் வாடி​னாலும் பள்​ளிக்​குச் செல்​லும் ஆர்​வம் ஜோஷ்​னா​வுக்கு இருந்​தது. பள்​ளி​யில் படித்​த​போதே பளுதூக்​குதல் விளை​யாட்​டிலும் ஆர்​வம் காட்​டி​னார். இதையடுத்து புவனேஸ்​வரில் உள்ள டென்விக் உயர் செயல்​பாட்டு விளை​யாட்டு மையத்​துக்கு கொண்டு வரப்​பட்​டார்.

இதன் பின்​னர் புவனேஸ்​வரில் உள்ள இலவச பள்​ளி​யான கலிங்கா இன்​ஸ்​டிடியூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸில்​(கேஐஎஸ்​எஸ்) சேர்ந்​தார். இங்கு 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் இலவசக் கல்​வி, தங்​குமிடம், விளை​யாட்​டுப் பயிற்சி ஆகிய வசதி​களைப் பெறுகின்​றனர். இதில் பெரும்​பாலானவர்​கள் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்​தவர்​கள். கேஐஎஸ்​எஸ் நிறு​வனர் டாக்​டர் அச்​யுதா சமந்​தா​வின் வழி​காட்​டு​தலின் பேரில் சர்​வ​தேச பளுதூக்​கும் போட்​டிகளில் ஜோஷ்னா பங்​கேற்​றார். சிறு​வயது முதலே விளை​யாட்​டின் மீதான தீராத ஆர்​வத்​தால் அவருக்கு வெற்றி கைகூடியது.

2018-ல் பயிற்​சி​யைத் தொடங்​கிய ஜோஷ்​னா, 2023-ல் நடை​பெற்ற உலக இளை​யோர் பளுதூக்​குதல் (40 கிலோபிரிவு) போட்​டி​யில் வெண்​கலம் வென்​றார். 2024-ல் நடை​பெற்ற இதே போட்​டி​யில் வெள்​ளி​யும், 2025-ல் வெண்​கலத்​தை​யும் கைப்​பற்​றி​னார். 2023-ல் டெல்​லி​யில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் பளுதூக்​குதல் போட்​டி​யில் வெண்​கல​மும், 2024-ல் தோஹா​வில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் பளுதூக்​குதல் போட்​டி​யில் தங்​க​மும் வென்று சாதனைப் பெண்​ணாக மாறி​னார்.

2023-ல் கிரேட்​டர் நொய்​டா​வில் நடந்த காமன்​வெல்த் இளை​யோர் பளுதூக்​குதல் போட்​டி​யில் தங்​கம் வென்​றார். 2024-ல் சுவா​வில் நடை​பெற்ற காமன்​வெல்த் யூத் போட்​டி​யிலும் அவர் தங்​கத்​தைக் கைப்​பற்றி சாதித்​தார்.

அது​மட்​டுமல்​லாமல் கேலோ இந்​தியா இளை​யோர் போட்​டிகளில் தொடர்ச்​சி​யாக தங்​க​மும், தேசிய இளை​யோர் பளுதூக்​குதல் போட்​டிகளில் தங்​கப் பதக்​கங்​களை​யும் ஜோஷ்னா வேட்​டை​யாடி வரு​கிறார். பளுதூக்​குதல் விளை​யாட்​டில் முக்​கி​யத்​து​வம் பெற்று வரும் ஜோஷ்​னா​வுக்கு தற்​போது பிரதமரின் தேசிய சிறார் சாதனை விருது நேற்று முன்​தினம் வழங்​கப்​பட்​டது. 16 வயதுக்​குள் அவர் செய்த சாதனை​களைப் பா​ராட்டி இந்த விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

குடிசை​யில் இருந்து குடியரசுத் தலை​வர் மாளி​கைக்கு சென்​றுள்ள வெற்​றி வீராங்​க​னை ஜோஷ்​னா​வுக்​கு பா​ராட்​டு​கள்​ குவிந்​து வருகின்​றன.

SCROLL FOR NEXT