விளையாட்டு

கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் மெஸ்​ஸியை காண முடி​யாத​தால் ரசிகர்​கள் ரகளை

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள சால்ட் லேக் விளை​யாட்டு மைதானத்​தில் அர்​ஜெண்​டினா அணி​யின் கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்​ஸியை காண முடி​யாத விரக்​தியில் ரசிகர்​கள் வன்​முறை, ரகளை​யில் ஈடு​பட்​டனர். மைதானத்​தில் இருந்த நாற்​காலிகளைத் தூக்கி வீசி சூறை​யாடினர்.

அர்​ஜெண்​டினா அணி​யின் கால்​பந்து ஜாம்​ப​வான் லியோனல் மெஸ்ஸி நேற்று அதி​காலை கொல்​கத்தா விமான​நிலை​யத்​துக்கு வந்​தார். விமான நிலைய வளாகத்​தில் அதி​காலை 2.30 மணிக்கு அவரை ரசிகர்​கள் கொட்​டும் பனி​யில் காத்​திருந்து வரவேற்​றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​துக்கு மெஸ்ஸி வருகை தந்​தார். அவரை காண்​ப​தற்​காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து டிக்​கெட்​டு​களை வாங்கி ரசிகர்​கள் மைதானத்​தில் குழு​மி​யிருந்​தனர். டெல்​லி, சென்​னை, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து ஏராள​மான ரசிகர்​கள் மைதானத்​துக்கு படையெடுத்​திருந்​தனர்.

மெஸ்​ஸி​யின் வாக​னம் சரி​யாக காலை 11.30 மணிக்கு மைதானத்துக்​குள் நுழைந்​தது. மெஸ்​ஸி​யுடன் கால்​பந்து வீரர்​கள் லூயிஸ் சுவாரஸ், ரோட்​ரிகோ டி பால் ஆகியோ​ரும் வந்​திருந்​தனர். மூவரைப் பார்த்​ததும் ரசிகர்​கள் உற்​சாக​மாக வரவேற்​றனர். அப்​போது, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள், மேற்கு வங்க மாநில விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அரூப் பிஸ்​வாஸ், கால்​பந்து கிளப் பிர​தி​நி​தி​கள் உட்பட சுமார் 80 பேர் கொண்ட ஒரு கூட்​டம் மெஸ்​ஸியை சூழ்ந்​து​கொண்​டது.

அந்​தக் கூட்​டம் மெஸ்​ஸி​யுடன் செல்ஃபி எடுக்​க​வும், கையெழுத்து வாங்​க​வும் முயன்​றது. இத​னால் மைதானத்​தின் கேலரி​களில் இருந்து ரசிகர்​களால் மெஸ்​ஸியை சரி​யாகப் பார்க்க முடியவில்​லை. இதனால் கோபமடைந்த ரசிகர்​கள் ‘மெஸ்​ஸியை காண வேண்​டும்’ என்று கோஷம் எழுப்​பினர். இதனால் மைதானத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து மெஸ்​ஸியை உடனடி​யாக மைதானத்​திலிருந்து அழைத்​துச் செல்ல அவர்​களது பாது​காவலர்​கள் முடிவு செய்​தனர்.

இதைத் தொடர்ந்து அவர் மைதானத்​திலிருந்து வெளியே சென்​றார். டிக்​கெட் வாங்​கி​யும் மெஸ்​ஸியைக் காண முடிய​வில்லை என்ற ஆத்​திரத்​தால் கோபத்​துக்கு புகழ் பெற்ற கொல்​கத்தா ரசிகர்​கள் மைதானத்தை சூறை​யாடத் தொடங்​கினர். அங்​கிருந்த நாற்​காலிகள், தடுப்​பு​கள் அனைத்​தை​யும் தூக்கி மைதானத்​தில் எறிந்து ரகளை​யில் ஈடு​பட்​டனர்.

தண்​ணீர் பாட்​டில்​களை​யும் வீசினர். மேலும், நூற்​றுக்​கணக்​கான ரசிகர்​கள் மைதானத்​துக்குள் புகுந்து தற்​காலிக​மாக அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த மேடைகளை வீசி எறிந்​தனர். மைதானத்​தில் இருந்த சில பொருட்​களுக்​குத் தீ வைத்து சூறை​யாடினர். இதையடுத்து போலீ​ஸார் ரசிகர்​கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்​டத்​தைக் கலைத்​தனர். இதனால் மைதானமே போர்க்​கள​மாக காட்​சி​யளித்​தது. கூடு​தல் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டதும் சிறிது நேரத்​தில் அங்கு அமைதி திரும்​பியது. மைதானத்​தில் ஏற்​பட்ட ரகளை தொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன.

இதுகுறித்து ரசிகர் ஒரு​வர் கூறும்​போது, “மை​தானத்​தில் தலை​வர்​களும் நடிகர்​களும் மட்​டுமே மெஸ்​ஸியை சூழ்ந்​திருந்​தனர். அப்​படி​யென்​றால் எங்​களை ஏன் அழைத்​தனர் என்று தெரிய​வில்​லை. நாங்​கள் ரூ.12 ஆயிரத்​துக்கு டிக்​கெட் வாங்​கி​யுள்​ளோம், ஆனால் எங்​களால் அவரது முகத்​தைக் கூட பார்க்க முடிய​வில்​லை. அவர் வெறும் 10 நிமிடங்​களுக்கு மட்​டுமே வந்​து​விட்டு சென்​று​விட்​டார். எங்​களால் அவரைப் பார்க்க முடிய​வில்லை என்​பது​தான் வருத்​தம்” என்​றார்.

சிலை திறப்பு: முன்​ன​தாக கொல்​கத்தா லேக் டவுனில் உள்ள பூமி ஸ்போர்ட்​டிங் கிளப் அருகே மெஸ்​ஸி​யின் 70 அடி உயர சிலை ஒன்று நிறு​வப்​பட்​டிருந்​தது. இதை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்​து​வைத்​தார். கையில் உலகக் கோப்​பையை பிடித்​திருப்​பது போன்று மெஸ்ஸி சிலை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. நிகழ்ச்​சி​யின்​போது இந்​தியா மற்​றும் அர்​ஜெண்​டி​னா​வின் கொடிகளை பிடித்​த​படி ரசிகர்​கள் நிகழ்ச்​சியை ரசித்​தனர்.

2-வது​முறை: கொல்​கத்​தாவுக்கு 2-வது முறை​யாக லயோனல் மெஸ்ஸி வருகை தந்​துள்​ளார். அவர் ஏற்​கெனவே 14 ஆண்​டு​களுக்கு முன்பு (2011-ம் ஆண்​டு)​கொல்​கத்​தாவுக்கு வருகை தந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

விசாரணைக்குழு: இந்​நிலை​யில், கொல்​கத்தா மைதானத்​தில் ஏற்​பட்ட பெரும் குழப்​பம், ரகளை சம்​பவத்​துக்கு மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி மன்​னிப்பு கோரி​னார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் கூறிய​தாவது: கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் இன்று ஏற்​பட்ட நிர்​வாகக் குறை​பாடு​களால் நான் மிகுந்த மன உளைச்​சலுக்​கும், அதிர்ச்​சிக்​கும் உள்​ளாகி​யுள்​ளேன். தங்​களுக்​குப் பிடித்​த​மான கால்​பந்து வீரர் லயோனல் மெஸ்​ஸியை ஒரு​முறை​யா​வது காண வேண்​டும் என்​ப​தற்​காகக் கூடி​யிருந்த ஆயிரக்​கணக்​கான விளை​யாட்டு ஆர்​வலர்​கள் மற்​றும் ரசிகர்​களு​டன் நானும் அந்த நிகழ்​வில் கலந்​து​கொள்​வதற்​காக மைதானத்​துக்​குச் சென்று கொண்​டிருந்​தேன். இந்த துர​திர்​ஷ்ட​வச​மான சம்​பவத்​துக்​காக, லயோனல் மெஸ்​ஸி​யிட​மும், அனைத்து விளை​யாட்டு ஆர்​வலர்​கள் மற்​றும் அவரது ரசிகர்​களிட​மும் நான் மனப்​பூர்​வ​மாக மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறேன்.

இந்​தச் சம்​பவம் குறித்து விரி​வான விசா​ரணை நடத்​தி, காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசா​ரணைக் குழு அமைக்​கப்​படும். இவ்​வாறு மம்தா பானர்ஜி கூறி​யுள்​ளார்.

ஏற்​பாட்​டாளர் கைது: இந்​நிலை​யில் சால்ட் லேக் மைதானத்​தில் மெஸ்ஸி நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சதத்ரு தத்தா கைது செய்​யப்​பட்​டுள்​ளார் என்​றும் அவரிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது என்​றும் மேற்கு வங்க ஆளுநர் சி.​வி. ஆனந்த போஸ் தெரி​வித்​துள்​ளார்.

மும்பை வந்தார் மெஸ்ஸி: முதல் நாள் நிகழ்ச்​சிகள் முடிவடைந்த நிலை​யில் நேற்று இரவு மெஸ்ஸி மும்பை வந்தார். மும்​பை​யில் இன்று நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் அவர் கலந்​து​கொள்​கிறார். இறு​தி​யாக 15-ம் தேதி டெல்​லி​யில் தனது பயணத்தை நிறைவு செய்​கிறார் லயோனல் மெஸ்​ஸி. அப்​போது அவர், பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்து பேசுகிறார். இந்​திய வரு​கையையொட்டி மெஸ்​ஸிக்கு ‘இசட்’ பிரிவு பாது​காப்பு வழங்​கப்பட உள்​ளது.

டிக்​கெட் பணம் வாபஸ்: கொல்​கத்தா மைதானத்​தில் ரகளை நடந்​த​தால் நிகழ்ச்சி ரத்​தான நிலை​யில் ரசிகர்​களுக்​கான டிக்​கெட் பணம் திருப்​பித் தரப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கொல்​கத்​தா, சால்ட் லேக் திடலுக்கு மெஸ்ஸி வந்​த​போது, அங்கு கலைநிகழ்ச்​சிகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தன. அடுத்​த​தாக மோகன் பகான் அணி​யின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணி​யும் டைமண்ட் ஹார்​பர் ஆல் ஸ்டார் அணி​யும் விளை​யாட இருந்​தன.

அதற்​குள் ரசிகர்​கள் ரகளை​யில் ஈடு​பட்​ட​தால் மெஸ்ஸி பாதி​யிலேயே திரும்​பிச் சென்​றார். இந்​நிலை​யில், டிக்​கெட் விற்​பனை​யில் மோசடி நடந்​த​தாகக் கூறப்​பட்ட நிலை​யில், இது குறித்து மேற்கு வங்​கத்​தின் டிஎஸ்பி ராஜீவ் குமார் பேசி​ய​தாவது:

மெஸ்ஸி இங்கு வந்​து, ரசிகர்​களைப் பார்த்து கை அசைத்​து​விட்​டு, சிலரைச் சந்​தித்​து​விட்டு செல்​வது​தான் திட்​டம். இதில் நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் ஏதாவது தவறு செய்​துள்​ளார்​களா என்​பது குறித்து விசா​ரிக்க ஓர் ஆணை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது பணம் திருப்பி அளிக்​கப்​படுமென விழா ஏற்​பாட்​டாளர்​கள் எழு​திக் கொடுத்​துள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஜாம்​ப​வானுடன் ஷாருக் கான் சந்​திப்பு: கொல்​கத்​தா​வில், கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்​ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்​கான் நேரில் சந்​தித்து பேசி​னார். அப்​போது அவருடன் ஷாருக் கான், அவரது மகன் அப்​ராம் ஆகியோர் புகைப்​பட​மும் எடுத்​துக்​கொண்​டனர். மூவரும் கைகுலுக்​கிக் கொள்​ளும் புகைப்​படங்​கள், வீடியோக்​களை ஷாருக் கான் ரசிகர்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டுள்​ளனர். இவை இணை​யத்​தில் வைரலாகி வரு​கின்​றன.

விழாக்​கோலம்: மெஸ்​ஸி​யின் வரு​கையை முன்​னிட்டு கொல்​கத்தா நகரம் முழு​வதும் அலங்​கரிக்​கப்​பட்டு விழாக்​கோலத்​தில் காட்​சி​யளித்தது. முக்​கிய சந்​திப்​பு​களில் பதாகைகள், வரவேற்பு வளைவு​கள், கட்​-அவுட்​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன.

தேனிலவு ரத்து: மெஸ்ஸி இந்​தியா வரு​வதையொட்டி அவரது தீவிர ரசிகை ஒரு​வர், தனது தேனிலவு பயணத்தை ரத்து செய்​து​விட்டு கொல்​கத்​தாவுக்கு வந்​துள்​ளார்.

இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு அளித்த பேட்​டி​யில் அந்​தப் பெண் ரசிகை கூறிய​தாவது: கடந்த வெள்​ளிக்​கிழமை எங்​களுக்கு திரு​மணம் நடை​பெற்​றது. எங்​களது தேனிலவு திட்​டத்தை ரத்து செய்​து​விட்​டோம். ஏனெனில், மெஸ்ஸி வரு​கிறார். நாங்​கள் அவரை 2010 முதலில் கவனித்து வரு​கிறோம். அவரைப் பார்ப்​பதே எங்​களுக்கு ஆனந்​தம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT