விளையாட்டு

திருமணம் ரத்து ஏன்? - ஸ்மிருதி மந்தனா அறிவிப்பும், பலாஷ் முச்சல் விளக்கமும்

வேட்டையன்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்​த​னா​வும், பிரபல இசையமைப்​பாள​ரும், மத்​தி​ய பிரதேசத்தை சேர்ந்​தவரு​மான பலாஷ் முச்​சலும் நீண்ட கால​மாக காதலித்து வந்தனர்.

இருவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்​சய​தார்த்​த​மும் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இவர்​களது திரு​மணம் சாங்​லி​யிலுள்ள ஸ்மிரு​தி​யின் பண்ணை வீட்​டில் நடைபெறு​வ​தாக இருந்​தது.

இந்நிலையில், மந்​த​னா​வின் தந்தை ஸ்ரீனி​வாசுக்கு திடீரென நெஞசுவலி ஏற்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதையடுத்து திரு​மணத்தை தள்ளி வைத்​திருப்​ப​தாக ஸ்மிருதி அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், ஸ்மிருதி மந்​த​னா​வின் வருங்​கால கணவர் பலாஷ் முச்​சல் வேறு ஒரு பெண்​ணுடன் நெருக்​க​மாக இருக்​கும் புகைப்படங்​கள் இணை​யத்​தில் வேக​மாக பரவின. இதன் தொடர்ச்சியாக, தனது திருமணத்தை ரத்து செய்வதாக ஸ்மிருதி அறிவித்தார்.

இந்தச் சூழலில் இசையமைப்பாளர் பலாஷ் முச்​சல், தனது திருமணம் ரத்தானது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என விளக்கம் கொடுத்துள்ளார்.

“நான் புனிதமானதாக கருதும் ஒன்று குறித்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு மக்கள் எளிதாக எதிர்வினையாற்றுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது என் வாழ்வின் கடினமான கட்டம். என் நம்பிக்கைகளை கொண்டு அதை கையாள்வேன்.

அடையாளம் தெரியாதவர்கள் பகிரும் சரிபார்க்கப்படாத வதந்திகளை கொண்டு ஒருவரை மதிப்பிடுவதை ஒரு சமூகமாக நாம் நிறுத்தக் கற்றுக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அது குற்றச்சாட்டுக்கு ஆளானவரை காயப்படுத்தக்கூடும். அது நமக்கு புரியாது.

தவறான மற்றும் அவதூறு கருத்துகளை பகிர்ந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எனது குழு மேற்கொள்கிறது. இந்த நேரத்தில் என்னோடு நின்ற அனைவருக்கும் நன்றி.

என் வாழ்வின் தனிப்பட்ட உறவு முடிந்தது. அதில் இருந்து வெளியேறி வாழ்வில் கடந்து செல்ல முடிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருமணம் ரத்து குறித்து ஸ்மிருதி மந்​தனா கூறும்போது, ‘‘என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் சமூக வலை​தளங்​களில் பேசப்பட்டு வரு​கின்​றன. எனது திரு​மணம் ரத்து செய்​யப்​பட்​டு​விட்​டது என்​பதை மட்​டும் தெளிவுபடுத்​திக் கொள்​கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT