வைபவ் சூர்​ய​வன்​ஷி

 
விளையாட்டு

சேப்​பாக்​கம் மைதானத்​தில் துலீப் டிராபி இறுதிப்போட்டி: தென் மண்டலம் - கிழக்கு மண்டலம் இன்று பலப்பரீட்சை

பெ.மாரிமுத்து

சென்னை: சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கும் துலீப் டிராபி கிரிக்கெட் இறு​திப் போட்​டி​யில் கிழக்கு மண்​டலம் - தென் மண்​டலம் அணி​கள் மோதுகின்​றன. வைபவ் சூர்​ய​வன்​ஷி, தேவ்தத் படிக்​கல், திலக் வர்​மா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவ​தால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்​பார்ப்பு உள்ளது.

திலக் வர்மா தலை​மையி​லான தென் மண்​டலம் அணி அரை இறுதி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வடக்கு மண்​டலம் அணியை வீழ்த்​தி​யிருந்​தது. இறு​திப் போட்​டியையொட்டி தேவ்​தத் படிக்​கல், முகமது சிராஜ் ஆகியோர் அணி​யில் இணைந்​துள்​ளனர். இது அந்த அணிக்கு கூடு​தல் வலுசேர்க்​கக்​கூடும். தேவ்​தத் படிக்​கல் கடந்த மாதம் இலங்​கை​யில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரில் 2 சதங்​கள் விளாசி அசத்​தி​யிருந்​தார். அதே பார்மை அவர், துலீப் டிராபி இறு​திப் போட்​டி​யில் தொடரச் செய்​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

அரை இறுதி ஆட்​டத்​தில் திலக் வர்மா முதல் இன்​னிங்​ஸில் 116* ரன்​களும், 2-வது இன்​னிங்​ஸில் 51 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். தேவ்​தத் படிக்​கல் களமிறங்​கு​வ​தால் கே.எல்​.​ராகுல் இந்த போட்​டி​யில் விளை​யாட​வில்​லை. இதன் காரண​மாக அரை இறு​திப் போட்​டிக்​குப் பின்​னர் அவர், தென் மண்டல அணி​யுடன் பயணிக்​க​வில்​லை.

பந்து வீச்சு துறை​யில் காயமடைந்த வேகப்​பந்து வீச்​சாளர் வித்​வத் கவேரப்​பாவுக்​குப் பதிலாக அனுபவ​மிக்க வேகப்​பந்து வீச்​சாளரான முகமது சிராஜ் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இலங்​கைக்கு எதி​ரான 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் 4 இன்​னிங்​ஸ்​களி​லும் 135 கி.மீ வேகத்​தைத் தொடவே சிரமப்​பட்​டிருந்​தார். வரவிருக்​கும் நியூஸிலாந்து சுற்​றுப்​பயணத்தை கருத்​தில் கொண்டு முகமது சிராஜ் மீண்​டும் ஃபார்​மிற்​குத் திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இஷான் கிஷன் தலை​மையி​லான கிழக்கு மண்​டலம் அணி அரை இறுதி ஆட்​டத்​தில் 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் மத்​திய மண்​டலம் அணியை வென்​றிருந்​தது. இளம் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்ஷி அரை இறுதி ஆட்​டத்​தில் முறையே 92 மற்​றும் 40 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார்.

இறு​திப் போட்​டி​யில் அவர், சிறப்​பாக செயல்​படும் பட்​சத்​தில் அனைத்து வடிவி​லான போட்​டிகளுக்​கு​மான வீரர் என்ற தரநிலையை சூர்​ய​வன்ஷி எட்​டக்​கூடும்.

பந்​து​வீச்சு துறை​யில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, முகேஷ் குமார் ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் அனுகுல் ராய், ஸ்ரேயஸ் கோபால் உறு​துணை​யாக இருக்​கக்​கூடும். இந்த போட்டி முகமது ஷமிக்கு முதல் தர விளை​யாட்​டில் 100-வது ஆட்​ட​மாகும்.

முகமது ஷமி முதல் தர, லிஸ்ட் ஏ மற்​றும் டி20 போட்​டிகளில் ஒட்​டுமொத்​த​மாக 903 விக்​கெட்​டு​களை வீழ்த்தி உள்​ளார். இந்​திய அணிக்​காக ஷமி, கடைசி​யாக கடந்த மார்ச் 2025-ல் நடை​பெற்ற சாம்​பியன்ஸ் டிராபி இறு​திப்​போட்​டி​யில் விளை​யாடி இருந்​தார்.

துலீப் டிராபி​யில் பல தருணங்​களில், 36 வயதான முகமது ஷமி தனது அனல் பறக்​கும் பந்​து​வீச்​சின் மூலம், தன்​னிடம் இன்​னும் விளை​யாடும் திறன் எஞ்​சி​யுள்​ளது என்​பதை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். ஒரு​வேளை, துலீப் டிராபி இறு​திப் போட்​டி​யில் அவர், தாக்​கத்தை ஏற்​படுத்​தி​னால்​ இந்​தி​ய அணிக்​குள்​ மீண்​டும்​ நுழைவதற்​கான வாய்ப்​பு கிடைக்​கக்​கூடும்.

SCROLL FOR NEXT