விளையாட்டு

நடு​வருடன் வாக்​கு​வாதம்: டெல்லி வீரர் நிதிஷ் ராணாவுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: நடு​வருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று முன்​தினம் சிஎஸ்​கே- டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. டெல்லி அணி பேட்​டிங் செய்​த​போது 19-வது ஓவரை சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்​டன் வீசி​னார்.

இதில் ஒரு பந்​தை, வைடு பந்து என நடு​வர் அறி​வித்​தார். ஆனால், அதை எதிர்த்து சிஎஸ்கே அணி ரிவியூவ் கேட்​டது. அந்த நேரத்​தில் பேட்​டிங் கிளவுஸ் ​(கை​யுறை) ஈரமாக இருக்​கிறது. இதனால் மாற்று கிளவுஸ் கொண்டு வரு​மாறு களத்​தில் பேட்​டிங் செய்து கொண்​டிருந்த டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் கேட்​டார்.

          

களத்​துக்கு வெளியே இருந்த டெல்லி கேபிடல்ஸ் வீரர் நிதிஷ் ராணா, பேட்​டிங் கிளவுஸை மைதானத்​துக்​குள் கொண்டு செல்ல முயன்​றார். ஆனால், அவரை நடு​வர் தடுத்து நிறுத்​தி​னார். இந்நிலை​யில் அடுத்த பந்​திலேயே ஸ்டப்ஸ் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து ஸ்டப்ஸ் களத்​திலிருந்து விரக்​தி​யில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து டெல்லி வீரர் நிதிஷ் ராணா, நடு​வருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார்.

நிதிஷ் ராணா​வின் நடத்​தை, ஐபிஎல் நன்​னடத்தை விதி 2.3-ஐ மீறு​வ​தாகும் என ஐபிஎல் நிர்​வாகம் தெரி​வித்​தது. இதையடுத்து அவருக்கு போட்டி ஊதி​யத்​தில் இருந்து 25 சதவீதத்தை அபராத​மாக ஐபிஎல் நிர்​வாகம் வி​தித்​துள்​ளது. அத்​துடன்​ போட்​டி தடைக்கான ஒரு புள்​ளியை​யும்​ வழங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில்​ தனது குற்​றத்​தை ஒப்​புக்​கொண்​டு, அப​ராதத்​தை நிதிஷ் ​ராணா ஏற்​றுக்​ கொண்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT