கோப்புப்படம்

 
விளையாட்டு

சென்​னை​யில் இன்று சிஎஸ்கே ரீயூனியன் விழா!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்​பர் கிங்​ஸ் ​(சிஎஸ்​கே) அணி நிர்​வாகம் தனது முன்​னாள் மற்​றும் இன்​னாள் வீரர்​களை ஒன்​றிணைக்​கும் வகை​யில் ‘ரோர் 26’ என்ற பெயரில் பிர​மாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை இன்​று (மார்ச் 22) சென்​னை​யில் நடத்​தவுள்​ளது.

இந்த விழா சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை​பெறவுள்​ளது. இதில் சிஎஸ்கே முன்​னாள் வீரர்​கள் சுரேஷ் ரெய்​னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், எஸ்​.பத்​ரி​நாத் உள்​ளிட்ட வீரர்​களும், அணி​யில் இடம்​பெற்​றுள்ள இன்​றைய வீரர்​களும் பங்​கேற்​க​வுள்​ளனர்.

          

இதில் சிறப்​பம்​ச​மாக இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானின் பிர​ம்மாண்ட இசை நிகழ்ச்சி நடை​பெறவுள்​ளது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்​க​வுள்ள நிலை​யில் ரசிகர்​களை உற்​சாகப்​படுத்​த இந்த நிகழ்ச்​சியை சிஎஸ்கே அணி நிர்​வாகம் நடத்​துகிறது.

SCROLL FOR NEXT