பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் அவர் கடந்த 26-ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது கோமா நிலையில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஆடம் கில்கிறைஸ்ட், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.