சென்னை: 3-வது ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஜோடி 11-1, 11-6 என்ற செட் கணக்கில் ரவி தீட்சித் - விகாஸ் மெஹ்ரா ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் வேலவன் செந்தில் குமார், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 11-6, 11-9 என்ற செட் கணக்கில் ராகுல் பாய்தா, அங்கிதா துபே ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில் குமார், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடி அரை இறுதியில் 12-10, 11-7 என்ற செட் கணக்கில் சுராஜ் குமார் சந்த், நிருபமா துபே ஜோடியை தோற்கடித்தது.