மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி 8 ஆண்டுக்குப் பிறகு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது.

 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் திறப்பு

கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் வீர​வசந்​த​ராயர் மண்​டபம் ஞாயிற்றுக்கிழமை திறக்​கப்​பட்​டது.

8 ஆண்​டு​களுக்​குப் பின்பு கிழக்குகோபுர வாசல் வழி​யாக பக்​தர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர். மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​திலிருந்த கடைகளில் 2018 பிப்.2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் வீர​வசந்​த​ராயர் மண்​டபம் முழு​மை​யாகச் சேதமடைந்​தது. ரூ.38.30 கோடி​யில் வீர​வசந்​த​ராயர் மண்​டபத்தை சீமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வந்​தன.

இதனிடையே, வரும் செப். 17-ம் தேதி மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா நடத்த முடிவு செய்​யப்​பட்​டு, அதற்கான திருப்​பணி​கள் தொடங்​கப்​பட்​டன.

தற்​போது திருப்​பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில், வீர​வசந்​த​ராயர் மண்​டபம் சீரமைப்புப் பணி நிறைவடைந்​துள்​ளது. இதையடுத்​து, குட​முழுக்கு விழாவுக்கு முன்​ன​தாக வீர​வசந்​த​ராயர் மண்​டபத்தை நேற்று திறக்க முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, வீர​வசந்​த​ராயர் மண்​டபம் பிர​திஷ்டை விழா சனிக்கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமத்​துடன் தொடங்​கியது. நேற்று காலை 9 மணி​யள​வில் பிர​திஷ்டை விழா மற்​றும் மீனாட்​சி, சுந்​தரேசுவரருக்கு அபிஷேகம் நடை​பெற்​றது. இதில் எம்​எல்​ஏக்​கள் அ.கல்​லாணை, எஸ்​.கேஆர்​.தங்​கப்​பாண்​டி, அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், அறங்​காவலர்​கள் பி.கே.எம்​.செல்​லை​யா, மு.சீனி​வாசன், து.சுப்​புலெட்​சுமி, எஸ்​.மீ​னா, கோயில் இணை ஆணை​யர் க.செல்​லத்​துரை, உதவி ஆணை​யர் சீ.மெய்​வேல் ஆகியோர் பங்​கேற்​றனர். வீர​வசந்​த​ராயர் மண்​டபப் பணி​களுக்​காக அடைக்​கப்​பட்​டிருந்த கிழக்கு கோபுர வாசல் 8 ஆண்​டு​களுக்​குப் பின்பு ஞாயிற்றுக்கிழமை திறக்​கப்​பட்​ட​தால் பக்​தர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

SCROLL FOR NEXT