சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. | படம்: ம.பிரபு |

 
ஆன்மிகம்

வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் வைகாசி விசாக பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாக தொடங்​கியது. வடபழனி முரு​கன் கோயி​லில் வைகாசி விசாகத்தை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் 10 நாட்​கள் பிரம்​மோற்சவ விழா விமரிசை​யாக நடை​பெறும்.

இதையொட்​டி, நேற்று முன்​தினம் மாலை வரசித்தி விநாயகர் வீதி உலா நடந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ என்ற பக்தி முழக்​கத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, வள்​ளி, தெய்​வானை சமேத சுப்​பிரமணி​யருக்கு சிறப்பு பூஜை​யும், வீதிஉலா​வும் நடை​பெற்​றது. இரவு 7 மணிக்கு மங்​களகிரி விமானத்​தில் சுப்​பிரமணி​யர் வீதிஉலா நடந்​தது.

2-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை புறப்​பாடும், நாளை இரவு ஆட்​டுக்​கிடா வாக​னம், 24-ம் தேதி இரவு நாக வாக​னத்​தி​லும் சுப்​பிரமணி​யர் வீதிஉலா வந்து அருள்​பாலிக்​கிறார். 25-ம் தேதி இரவு பஞ்​சமூர்த்தி புறப்​பாடு, 26-ம் தேதி இரவு யானை வாகன புறப்​பாடும் நடை​பெறுகிறது.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் 27-ம் தேதி காலை நடை​பெறுகிறது. இரவு ஒய்​யாளி உற்​சவ​மும், 28-ம் தேதி இரவு குதிரை வாகன புறப்​பாடும் நடை​பெறுகிறது.

29-ம் தேதி இரவு ஆண்​ட​வர் வீதிஉலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். மேற்​கண்ட நிகழ்​வு​கள் அனைத்​தும் காலை 7 மணிக்​கும், இரவு 7 மணிக்​கும் நடை​பெறுகின்​றன.

வைகாசி விசாக​மான மே 30-ம் தேதி காலை 7.35 மணிக்கு வள்ளி, தெய்​வானை சமேத சண்​முகர் வீதி உலா​வும், காலை 9 மணிக்கு தீர்த்​த​வாரி உற்​சவ​மும், கலசாபிஷேக​மும் நடை​பெறுகிறது. மாலை 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், மயில் வாக​னத்​தில் புறப்​பாடு, சுப்​பிரமணி​யர் வீதிஉலா நடக்​கிறது.

அதைத் தொடர்ந்​து, கொடி​யிறக்​கத்​துடன் பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்​மோற்சவ நாட்​களில் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தின​மும்​ காலை 7 மணிக்​கு மங்​களகிரி வி​மான புறப்​பாடு நடைபெறும்​.

SCROLL FOR NEXT