ஆன்மிகம்

ஏழுமலையான் கோயிலில் உகாதி பண்டிகை கோலாகலம்; கடப்பாவில் பெருமாளை வழிபட்ட முஸ்லிம்கள்

என்.மகேஷ்குமார்

திருமலை: பராபவ நாம தெலுங்கு வருடப் ​பிறப்பை முன்​னிட்டு திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நேற்று முகப்பு கோபுரம், பலிபீடம், தங்க கொடிமரம், உப சன்​ன​தி​கள் மற்​றும் கோயில் வெளிப்​புறத்​தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஏழு​மலை​யான், மச்​சாவ​தார சிலைகள் வைத்து வண்​ணமிகு மலர்க்​காட்​சி​யும் அமைக்​கப்​பட்​டிருந்​தது. இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​தது.

மூல​வருக்கு புதிய பட்​டாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்​டன. உற்​சவர்​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத மலையப்​பருக்​கும் புதிய பட்​டாடை உடுத்​தி, சேனா​திப​தி​யான விஸ்​வக்​சேனருடன் கருடன் சன்​னதி அருகே கொண்டு வந்​து, அங்கு புதிய பஞ்​சாங்​கம் வாசிக்​கப்​பட்​டது. அப்​போது இந்த ஆண்டு பலன்​களை வேத பண்​டிதர்​கள் கூறினர்.

          

பிறகு பக்​தர்​கள், அதி​காரி​கள் அனை​வருக்​கும் ‘உகாதி பச்​சடி’ பிரசாத​மாக வழங்​கப்​பட்​டது. கடப்பா மாவட்​டம், தேவுன்னி கடப்பா பகு​தி​யில் உள்ள ஸ்ரீ லட்​சுமி வெங்​கடேஸ்​வரர் திருக்கோயி​லிலும் நேற்று உகாதி பண்​டிகை கொண்டாடப்பட்டது.

அப்​போது, அந்த ஊரில் வசிக்​கும் இஸ்​லாமியர்​கள் குடும்​பம், குடும்​ப​மாக வந்து பெரு​மாளை வழிபட்​டனர். ஒவ்​வொரு ஆண்​டும் பீபி நாச்​சி​யார் சமேத​மாக உள்ள பெரு​மாளை வழிபடு​வது இங்குள்ள இஸ்​லாமியர்​களின் வழக்​கம். பெரு​மாளை இவர்​கள் தங்​கள் வீட்டு மரு​மக​னாக பார்க்​கின்​றனர்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT