வேளாங்கண்ணியில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியவாறு பங்கேற்றனர்.

 
ஆன்மிகம்

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் குருத்தோலை ஞாயிறை முன்​னிட்டு நேற்று குருத்​தோலை பவனி நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் கலந்​து​கொண்​டனர்.

கிறிஸ்​தவர்​களின் முக்​கியப் பண்​டிகை​களில் ஒன்​றான ஈஸ்​டர் பண்​டிகை​யையொட்​டி, பிப்​.18-ம் தேதி சாம்​பல் புதனுடன் தவக்​காலம் தொடங்​கியது. ஈஸ்​டர் பண்​டிகைக்கு முந்​தைய வாரத்​தின் ஞாயிற்​றுக்​கிழமை குருத்​தோலை ஞாயிறாக கடைபிடிக்​கப்​படு​கிறது.

          

இந்​நாளில், கிறிஸ்தவ மக்​கள் தென்​னங்​கீற்​றிலான குருத்​தோலைகளை ஏந்தி பவனி​யாக சென்று தேவால​யங்​களில் வழிபடு​வது வழக்​கம். அதன்​படி, நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் குருத்​தோலை ஞாயிறை முன்​னிட்டு குருத்​தோலை பவனி நேற்று காலை நடை​பெற்​றது.

இதில், ஆயிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் கலந்​து​கொண்​டு, குருத்​தோலைகளை ஏந்தி ‘உன்​னதங்​களிலே ஓசன்​னா, தாவீ​தின் மைந்​தனே ஓசன்​னா, ஆண்​ட​வர் பெய​ரால் வரு​கிறவர் ஓசன்​னா’ என்று பாடலை பாடியபடி பவனி​யாகச் சென்றனர்.

பேராலய முகப்பு பகு​தி​யில் இருந்து வேளாங்​கண்​ணி​யின் முக்​கிய வீதி​கள் வழி​யாக சென்ற பவனி, பேராலய கீழ் ஆலயத்தை அடைந்​தது. தொடர்ந்​து, பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் பேரால​யத்​தில் குருத்​தோலை ஞாயிறு சிறப்பு திருப்​பலி, பிரார்த்​தனை​கள் நடை​பெற்​றன.

தெலுங்​கு, மலை​யாளம், ஆங்​கிலம், இந்தி உள்​ளிட்ட மொழிகளி​லும் சிறப்பு திருப்​பலிகள் நடை​பெற்​றன.

SCROLL FOR NEXT