திருவையாறில் நேற்று தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆண்டு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் இசையஞ்சலி செலுத்திய கலைஞர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ் |

 
ஆன்மிகம்

திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: திருவையாறு தியாக​ராஜர் ஆராதனை விழா​வில் நேற்று ஒரே நேரத்​தில் ஆயிரக்​கணக்​கான இசைக் கலைஞர்​கள் பஞ்​சரத்ன கீர்த்​தனை​களை பாடி​யும், இசைத்​தும் சத்​குரு தியாக​ராஜர் சுவாமிக்கு இசையஞ்​சலி செலுத்​தினர்.

சங்​கீத மும்​மூர்த்​தி​களில் ஒரு​வ​ரான தியாக​ராஜர் சுவாமிகள், தஞ்​சாவூர் மாவட்​டம் திருவையாறு காவிரிக் கரை​யில் முக்தி அடைந்​தார். இங்கு அவரது சமாதி அமைந்​துள்​ளது.

ஆண்​டு​தோறும் இங்கு தியாக​ராஜர் ஆராதனை விழா விமரிசை​யாக நடை​பெறும். அந்த வகை​யில், நடப்​பாண்டு தியாக​ராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்கு​மார் விழா​வைத் தொடங்​கி​வைத்​தார். தொடர்ந்​து, ஏராள​மான இசைக் கலைஞர்​களின் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

உஞ்ச விருத்தி ஊர்வலம்: நிறைவு நாளான நேற்று தியாக​ராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்​யப்​பட்​டது. தொடர்ந்​து, தியாக​ராஜர் வாழ்ந்த இல்​லத்​தில் இருந்து உஞ்ச விருத்தி ஊர்​வலம் தொடங்​கியது. இதில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பின்​னர், காலை 9 மணி​யள​வில் பிரபஞ்​சம் பாலச்​சந்​திரனின் புல்​லாங்​குழல் இசை​யுடன் பஞ்​சரத்ன கீர்த்​தனை தொடங்​கியது.

பிரபல இசைக் கலைஞர்​கள் சுதா ரகு​நாதன், மஹதி, ஓ.எஸ்​.அருண், கடலூர் ஜனனி, பின்னி கிருஷ்ணகு​மார், அரித்​து​வாரமங்​கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜா​ராவ் உட்பட ஆயிரத்​துக்​கும் அதி​க​மான இசைக் கலைஞர்​கள், ஆர்​வலர்​கள் கலந்​து​கொண்​டு, ஒரு​மித்த குரலில் பஞ்​சரத்ன கீர்த்​தனை​களைப் பாடி​யும், இசைக் கருவி​களை இசைத்​தும் ஸ்ரீதி​யாக​ராஜருக்கு இசையஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர், பி.சுசித்ரா குழு​வினரின் ஹரி கதை, தாமல் ராம கிருஷ்ணனின் உபன்​யாசம் ஆகிய நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. தொடர்ந்து இரவு வரை இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. தியாக​ராஜ சுவாமிகள் வீதியுலா​வுக்​குப் பின், ஆஞ்சநேய உற்​சவத்​துடன் விழா நிறைவு பெற்​றது.

SCROLL FOR NEXT