கோப்புப் படம்

 
ஆன்மிகம்

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழா டிச. 25-ல் காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராம​நாத​புரம் மாவட்​டம் திருஉத்​தரகோசமங்​கை​யில் பழமை​யான மங்​களேஸ்​வரி உடனுறை மங்​கள​நாதர் கோயில் உள்​ளது.

இங்​குள்ள நடராஜர் சந்​நி​தி​யில் ஒற்றைப் பச்சை நிறமரகதக் கல்​லாலான சிலை உள்​ளது. இங்கு ஆண்​டுக்கு ஒரு​முறை மார்​கழி மாதத்​தில் நடை​பெறக்​கூடிய சந்​தனக்காப்பு படி களைதல், அபிஷேகம், சந்​தனம் காப்​பிடு​தல் மற்​றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்​றது. இந்த ஆண்டு விழா வரும் 25-ம் தேதி காப்​புக் கட்​டு​தலுடன் தொடங்​கு​கிறது.

ஜன. 2-ம் தேதி மரகத நடராஜருக்கு பூசப்​பட்ட சந்​தனக் காப்பு படி களைதல் மற்​றும் மூலிகை தைலம் சாற்​றும் நிகழ்ச்சி, ஜன 3-ம் தேதி அதி​காலை புதிய சந்​தனம் காப்​பிடு​தல் நிகழ்ச்​சி​ ஆகியவை நடை​பெற உள்​ளன

SCROLL FOR NEXT