தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய திரளான பக்தர்கள்.

 
ஆன்மிகம்

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

செய்திப்பிரிவு

ராமேசுவரம் / திருச்சி: தை அமா​வாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடலில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித நீராடி ராம​நாத சுவாமி கோயி​லில் தரிசனம் செய்​தனர்.

தை அமா​வாசையையொட்டி ராமேசுவரம் ராம​நாதசு​வாமி கோயி​லில் நேற்று அதி​காலை நடை திறக்​கப்​பட்டு ஸ்படிகலிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடை​பெற்​றன. பகல் 12 மணி​யள​வில் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் ராமர், சீதா, லட்​சுமணர், பஞ்ச மூர்த்​தி​களு​டன் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு தீர்த்​த​வாரி வழங்கி அருள்​பாலித்​தனர். தொடர்ந்​து, பகல் முழு​வதும் ராம​நாத சுவாமி கோயில் நடை திறந்​திருந்​தது. இரவு மண்​டகப்​படி​யில் தீபா​ராதனை​யும், கருட வாக​னத்​தில் சுவாமி, அம்​பாள் புறப்​பாடும் நடை​பெற்​றது.

முன்​ன​தாக, தமிழகம் மட்​டுமின்றி கர்​நாட​கா, கேரளா, தெலங்​கா​னா, ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இருந்து பக்​தர்​கள்​நேற்று முன்​தினம் இரவு முதலே ராமேசுவரம் வரத் தொடங்​கினர். அதி​காலை முதல் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அக்னி தீர்த்​தக்​கடலில் தங்​களின் முன்​னோர்​களுக்கு திதி கொடுத்​து, ராம​நாத சுவாமி கோயிலுக்​குள்ளே உள்ள 22 தீர்த்​தங்​களில் நீராடி சுவாமி மற்​றும் அம்​பாளை நீண்ட வரிசை​யில் காத்​திருந்து தரிசனம் செய்​தனர்.

ராமேசுவரத்​தில் அக்னி தீர்த்​தக் கடற்​கரை, ராம​நாத சுவாமி கோயில் ரத வீதி​கள் உள்​ளிட்ட பல பகு​தி​களில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மேலும், பக்​தர்​களின் வசதிக்​காக தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் சிறப்​புப் பேருந்​துகளும், மதுரையி​லிருந்து சிறப்பு ரயிலும் ராமேசுவரத்​துக்கு இயக்​கப்​பட்​டன.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்: இதே​போல, ஸ்ரீரங்​கம் அம்மா மண்​டபம் படித்​துறை​யிலும் நேற்று அதி​காலை முதலே ஆயிரக்​கணக்​கானோர் காவிரி ஆற்​றில் புனித நீராடினர்.

கோயில்களில் தரிசனம்: தொடர்ந்​து, அங்​குள்ள புரோகிதர்​கள் உதவி​யுடன் முன்​னோர்​களுக்கு திதி கொடுத்​தனர். இதன் காரண​மாக நேற்று அதி​காலை முதல் மாலை வரை மாம்​பழச் சாலை​யி​லிருந்து ஸ்ரீரங்​கம் வரை மக்​கள் கூட்​டம் அதி​கம் காணப்​பட்​டது. பக்​தர்​களின் பாது​காப்​புக் கருதி ஸ்ரீரங்​கம் போலீ​ஸார் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர்.

நீர்​நிலைகளில் புனித நீராடி, பிதுர் திதி கொடுத்​தவர்​கள் அரு​கில் உள்ள கோயில்​களுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்​தனர். இதனால், ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயில், திரு​வானைக்​காவல் ஜம்​பு​கேஸ்​வரர் அகிலாண்​டேஸ்​வரி கோயில், சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் உட்பட திருச்சி மற்​றும் சுற்​றுப்​பகு​தி​களில் உள்ள முக்​கிய கோயில்​களில் நேற்று வழக்​கத்​தை​விட பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது.

இதே​போல, திருச்​சி, தஞ்​சாவூர் மாவட்​டங்​களில் காவிரி ஆற்​றின் படித்​துறை​கள், வேதா​ரண்​யம், பூம்​பு​கார் கடற்​கரைகளில் ஏராள​மானோர் முன்​னோர்​களுக்கு திதி கொடுத்​து, புனித நீராடினர்.

SCROLL FOR NEXT