காங்கயத்தில் நடைபெற்ற ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியிட்டு விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி வி.வி. தனியரசு நூலை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர் கே.கதிரேசன் பெற்றுக்கொண்டார். உடன், நூலாசிரியரான தம்பிரான் ரிஷபானந்தர் உள்ளிட்டோர்.

 
ஆன்மிகம்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ வெளியீடு

செய்திப்பிரிவு

திருப்​பூர்: தம்​பி​ரான் ரிஷ​பானந்​தர் எழு​திய ‘ரிஷ​பானந்​தரின் பொக்​கிஷம் - பஞ்​சபட்சி பஞ்​சாங்​கம் 2026’ நூல் வெளி​யீட்டு விழா திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யத்​தில் உள்ள சிவன்​மலை அடி​வாரத்​தில் அண்​மை​யில் நடை​பெற்​றது.

கலைகளுள் மேன்மை பொருந்​தி​ய​தாகப் போற்​றப்​படும் பஞ்​சபட்சி சாஸ்​திரம், சிவபெரு​மா​னால் பார்​வதி தேவி​யிடம் கூறப்​பட்​ட​தாக ஐதீகம் உள்​ளது. இதை அறிந்​திருந்​தால் அனைத்​தி​லும் வெற்றி பெறலாம் என்​றும் கருதப்​படு​கிறது.

பஞ்​சபட்சி சாஸ்​திரத்​தைக் கொண்​டு, வல்​லூறு, ஆந்​தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களின் குணநலன்​களை மனிதரோடு ஒப்​பிட்​டுப் பார்க்​கும் வழக்​கம் உள்​ளது. ஒரு​வர் பிறக்​கும் நட்​சத்​திரத்​தின் அடிப்​படை​யில் அவருக்​கான பறவை தீர்​மானிக்​கப்​படு​கிறது.

பட்சி சாஸ்​திரம், குரு​நாதரின் வழி​யாக சீடர்​களுக்கு கூறப்​பட்டு வந்​தது. பார்​வதி தேவி முரு​கப் பெரு​மானுக்​கும், முரு​கப் பெரு​மான், அகத்​தி​யர் போன்ற சித்​தர்​களுக்​கும் இக்​கலையை எடுத்​துரைத்​தனர். மேலும், பார்​வதி தேவி நந்​திதேவருக்​கும் இக்​கலையை பயிற்​று​வித்​தார். நந்​திதேவர் மூலம் போகருக்​கும், போகர் மூலம் உரோமரிஷிக்​கும் இக்​கலை பயிற்​று​விக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இத்​தகைய சிறப்​பு​கள் மிகுந்த இந்​நூலை திருச்சி குடும்ப நல நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி வி.​வி. தனியரசு வெளி​யிட்​டார். திரைப்​படத் தயாரிப்​பாளர் ராஜ​பாளை​யம் கே.க​திரேசன் முதல் பிர​தி​யைப் பெற்​றுக்​கொண்​டார்.

நிகழ்​வில் பேசிய தம்​பி​ரான் ரிஷ​பானந்​தர் “பு​திய ஆண்​டின் தொடக்க நூலாக ‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகம் எனது நூலை வெளி​யிட்​டுள்​ளது. அனை​வருக்​கும் பயன்​படும் வகை​யில் இந்த நூல் வெளி​யாகி​யிருப்​பது மிக​வும் மகிழ்ச்சி அளிக்​கிறது” என்​றார்.

விழாவுக்கு கோபுரம் பவுண்​டேசன் நிறு​வனர் ப.கோ​விந்​த​ராஜ் முன்​னிலை வகித்​தார். பிரபல க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்கு​மார் காணொலி வாயி​லாக நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று வாழ்த்​துரை வழங்​கி​னார்.

நிகழ்​வில், திருப்​பூர் வடக்கு துணை வட்​டாட்​சி​யர் டி.அருள்​கு​மார், வரலாற்று ஆசிரியர் கே.அண்​ணாதுரை, தம்​பி​ரான் குடில் அறக்​கட்​டளை நிர்​வாகி பழனி எம்​.ச​திஷ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்​தி​யன் எக்​ஸ்​ பிரஸ் குழு​மத் தலை​வர் விவேக் கோயங்கா வாழ்த்​துக் கடிதம் அனுப்​பி​யிருந்​தார். மொத்​தம் 384 பக்​கங்​கள் கொண்ட இந்​நூலின் விலை ரூ.320. இந்​நூலை https://store.hindutamil.in/publications என்ற ஆன்​லைன் பக்​கத்​தில் பணம் செலுத்தி வாங்​கலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 7401296562 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT