திருச்செந்தூர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

 
ஆன்மிகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: பொங்​கல் பண்​டிகைக் காலங்​களில் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் ஏராள​மான பக்​தர்​கள் திருச்​செந்​தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பின்​னர், தங்​களது வீடு​களுக்​குச் சென்று பொங்​கல் திரு​நாளைக் கொண்​டாடு​வது வழக்​கம்.

இந்​தாண்​டும் மாலை அணிந்து விரதம் இருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கடந்த சில நாட்​களாக திருச்​செந்​தூர் கோயிலுக்கு காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும், பால்​குடம் எடுத்​தும் வரு​கின்​றனர்.

திருச்​செந்​தூர்- தூத்​துக்​குடி சாலை, திருநெல்​வேலி சாலை, வள்​ளியூர் சாலை, கன்​னி​யாகுமரி கிழக்கு கடற்​கரை சாலை என அனைத்து சாலைகளி​லும் குழந்​தைகள், பெண்​கள், ஆண்​கள் என பக்​தர்​கள் குழு​வினர் திருச்​செந்​தூரை நோக்கி பாத​யாத்​திரை வரு​கின்​றனர்.

நேற்று ஞாயிறு விடு​முறை தினம் என்​ப​தால் திருச்​செந்​தூரில் பக்​தர்​கள் கூட்​டம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக இருந்​தது. இதனால், கடலில் நீராடி, நீண்​ட​வரிசை​யில் 5 மணி நேரத்​துக்​கும் மேலாக காத்​திருந்து பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். கோயில் பிர​காரங்​கள், கடற்​கரை, நாழிக்​கிணறு பகு​தி​களி​லும் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

பொங்​கல் பண்​டிகைக்கு இன்​னும் 3 நாட்​கள் மட்​டுமே உள்​ள​தால், பக்​தர்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் போலீ​ஸார் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT