மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம்: அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிகோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க வந்த அதிமுக, பாஜக நிர்வாகிகள்.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிகோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க வந்த அதிமுக, பாஜக நிர்வாகிகள்.

Updated on
1 min read

மதுரை: மதுரை​யில் பிரதமர் மோடி பங்​கேற்​கும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் முதல் பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டத்​துக்கு அனு​மதி கோரி அதி​முக, பாஜக​வினர் இணைந்​து, மதுரை மாநகரக காவல் ஆணை​யரிடம் மனு அளித்​தனர்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி மதுரை​யில் வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் முதல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​கிறார். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், பாமக தலை​வர் அன்​புமணி மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

இந்​தப் பொதுக் கூட்​டத்தை மதுரை பாண்​டிகோ​யில் அருகே முருக பக்​தர்​கள் மாநாடு நடை​பெற்ற அம்மா திடலில் நடத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதற்கு அனு​மதி கோரி பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் ராம. சீனி​வாசன், மாவட்​டத் தலை​வர்​கள் மாரி சக்​கர​வர்த்​தி, ராஜசிம்​மன் ஆகியோர் மதுரை மாநகர காவல் ஆணை​யரிடம் நேற்று மனு அளித்​தனர்.

அப்​போது, அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் செல்​லூர் ராஜு, ஆர்​.பி.உதயகு​மார், அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் ராஜன் செல்​லப்​பா, பெரியபுள்​ளான், அதி​முக ஐ.டி. பிரிவுத் தலை​வர் ராஜ்சத்​யன், டாக்​டர் சரவணன் மற்​றும் நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்.

பின்​னர் ராம. சீனி​வாசன் கூறும்​போது, “மதுரை​யில் வரும் 23-ம் தேதி பாஜக பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார். உள்​துறை அமைச்​சர் அமித்ஷா வரவில்​லை. பொதுக் கூட்​டத்​தில் அதி​முக உட்பட அனைத்து கூட்​ட​ணிக் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களும் பங்​கேற்​கின்​றனர். பொதுக் கூட்​டத்​துக்​கான ஏற்​பாடு​களை பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து செய்து வரு​கின்​றன” என்​றார்.

முன்​னாள் அமைச்​சர் செல்​லூர் ராஜு கூறும்​போது, “வரும் தேர்​தலில் ஆட்சி மாற்​றம் நிகழ்​வது உறு​தி. மற்​றொரு சித்​திரைத் திரு​விழா​போல பிரதமர் பங்​கேற்​கும் பொதுக்​கூட்​டம் நடை​பெறும். இந்த கூட்​டத்​துக்கு அதி​முக சார்​பில் என்ன செய்ய வேண்​டும் என்​பது குறித்து நிர்​வாகி​களுக்கு பழனி​சாமி ஆலோ​சனை வழங்கி உள்​ளார்” என்​றார்.

<div class="paragraphs"><p>மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிகோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க வந்த அதிமுக, பாஜக நிர்வாகிகள்.</p></div>
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in