திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவச மாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயிலில் மீண்டும் பிரசாதம்: விறகு அடுப்பை பயன்படுத்தி லட்டு தயாரிப்பு

பக்தர்களுக்கு வழங்க அறநிலையத் துறை ஏற்பாடு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக நிறுத்​தப்​பட்ட இலவச லட்டு பிர​சாதம் மீண்​டும் வழங்​கும் பணி தொடங்​கி​யது.

அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் பிர​சாதம் தயாரிக்க முடி​யாமல் இலவச​மாகப் பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்த லட்டு பிர​சாதம் நிறுத்​தப்​பட்​டிருந்​தது.

          

இந்​நிலை​யில், நேற்று இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் உத்​தர​வின்​படி, கோயில் வளாகத்​தில் இலவச லட்டு பிர​சாதம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்​கொண்​டு, விறகு அடுப்பு மூல​மாக லட்டு தயாரிக்​கும் பணி நடை​பெற்​று, நேற்று காலை முதல் மீண்​டும் பக்​தர்​களுக்கு இலவச லட்டு பிர​சாதம் வழங்​கப்​பட்டு வருகிறது.

அதே​போல் பிர​சாத விற்​பனை நிலை​யத்​தில் புளி சாதம் மற்​றும் சர்க்​கரை பொங்​கல் மட்​டுமே பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது.

லட்டு, அதிரசம், முறுக்​கு, மிளகு வடை ஆகியவை வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் தயாரிக்க முடி​யாமல் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT