| படம்: எஸ்.சத்தியசீலன் |

 
ஆன்மிகம்

ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆழ்​வார்​பேட்டை குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி கோயில் கும்​பாபிஷேக விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் மிக​வும் பழமை​யான குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி கோயில் அமைந்​துள்​ளது. இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள வடபழனி முரு​கன் கோயி​லின் உபகோயி​லான இதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டது.

அதன்​படி, சிற்ப சாத்​திர முறைப்​படி நூதன கொடிமரம் நிறு​வப்​பட்​டு, திருப்​பணி​கள் அனைத்​தும் முழு​மை​யாகப் பூர்த்​தி​யடைந்த நிலை​யில் நேற்று மகா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

முன்​ன​தாக, நேற்று முன்​தினம் காலை யாக​சாலை வளர்க்​கப்​பட்டு கணபதி ஹோமம், நவக்​கிரக ஹோமம், வாஸ்து சாந்​தி, பிர​வேசபலி, யந்​திர சமர்ப்​பணம், விக்​கிரக பிர​திஷ்டை, அஷ்டபந்​தனம் சாற்​று​தல் ஆகிய வைபவங்​கள் நடை​பெற்​றன.

மாலை​யில் அங்​கு​ரார்ப்​ பணம் எனும் முளைப்​பாரி​யிடு​தல், ரக் ஷாபந்​தனம், முதற்​காலயாக​சாலை பூஜைகள், பூர்​ணா ஹூ​தி, தீபா​ராதனை ஆகியவை நடை​பெற்​றன.

சென்னை ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கும்​பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு இரண்​டாம் கால யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. காலை 9 மணிக்கு பூர்​ணாஹூதி நிறைவடைந்​து, அதனைத் தொடர்ந்து யாத்​ரா​தானம், கடப்​புறப்​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றன.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாக, காலை 10 மணிக்கு விமான கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. அதனைத் தொடர்ந்​து, மூல​வர் குழந்தை முத்​துக்​கு​மார சுவாமி, பரி​வார தெய்​வங்​களான விநாயகர், தட்​சிணா​மூர்த்​தி, சிவலிங்​கம், அம்​பாள், சண்​டிகேஸ்​வரர் சந்​நி​தி​களுக்கு அஷ்டபந்தன மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டது.

வடபழனி முரு​கன் கோயில் தலைமை சிவாச்​சா​ரி​யார் செல்​வம் தண்​ட​பாணி தலை​மை​யில் சிவாச்​சா​ரி​யார்​கள் இந்த கும்​பாபிஷேகத்தை நடத்தி வைத்​தனர்.

இந்த விழா​வில் வடபழனி முரு​கன் கோயில் தக்​கார் எல்​. ஆ​தி​மூலம், துணை ஆணை​யர் லட்​சுமி, சென்னை முழு​வ​தி​லு மிருந்து திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

அவர்​கள் மீது புனித கும்ப நீர் தெளிக்​கப்​பட்​டு, பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்​டன. தொடர்ந்​து, நேற்று மாலை மூல​வருக்கு விசேஷ அலங்​காரங்​கள்​ செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்பட்டது.

SCROLL FOR NEXT