கோப்புப் படம்

 
ஆன்மிகம்

திருப்பதியில் டிச.17 முதல் சுப்ரபாத சேவைக்கு பதில் திருப்பாவை சேவை

செய்திப்பிரிவு

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் தினந்​தோறும் சுப்​ர​பாத சேவை​யுடன் சுவாமியை துயில் எழச் செய்​வார்​கள். ஆனால் மார்​கழி மாதத்​தில் மட்​டும் 12 ஆழ்​வார்​களில் ஒரு​வ​ரான ஆண்​டாள் அருளிய திருப்​பாவையை 30 நாட்​கள் பாடி சுவாமியை துயில் எழச் செய்​வது ஐதீகம்.

இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி மதி​யம் 1.23 மணிக்கு மார்​கழி மாதம் பிறப்​ப​தால், மறு​நாள் 17-ம் தேதி அதி​காலை முதல் திருப்​பாவை பாடப்​படும் என திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. ஜன.14-ம் தேதி வரை திருப்​பாவை பாடி பெரு​மாளை துயில் எழச்​செய்ய உள்​ளனர். இதுத​விர மார்​கழி முழு​வதும்  கிருஷ்ணருக்​குத்​தான் ஏகாந்த சேவை நடை​பெறும்.

SCROLL FOR NEXT