திருஉத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்புடன் ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்த மரகத நடராஜர்.

 
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

கடலூர் / ராமநாதபுரம்: சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் மார்​கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘சிவ சிவ’ என்ற முழக்​கத்​துடன் நடராஜப் பெரு​மானை தரிசனம் செய்​தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்​களில் ஆகா​யத் தலமான சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் சிவ​காமசுந்​தரி சமேத நடராஜமூர்த்​தி​யின் மார்​கழி ஆருத்ரா தரிசன உற்​சவம் கடந்த 25-ம் தேதி தொடங்​கியது.

முக்​கிய நிகழ்​வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடை​பெற்​றது. இதையொட்டி நேற்று அதி​காலை சிவ​காமசுந்​தரி சமேத நடராஜமூர்த்​திக்கு மகா அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர் சித்​சபை​யில் ரகசிய பூஜை நடந்​தது. பஞ்​சமூர்த்தி வீதி​யுலா வந்த பின்​னர் மதி​யம் 3.20 மணிக்கு ஆயிரங்​கல் மண்​டபத்​தில் இருந்து ஸ்ரீநட​ராஜரும், சிவ​காமி சுந்​தரி அம்​பாளும் சித்​சபைக்கு சென்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் ‘சிவ சிவ’ முழக்​கத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மார்​கழி மாத சிறப்பு நிகழ்​வின் தொடர்ச்​சி​யாக இன்று (ஜன.4) பஞ்​சமூர்த்தி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா, நாளை (ஜன.5 ) ஞானப்​பிர​காசம் குளத்​தில் தெப்ப உற்​சவம் நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் பொதுதீட்​சிதர்​கள் செய்​துள்​ளனர்.

திருஉத்தரகோசமங்கை கோயில் ​ராம​நாத​புரம் மாவட்​டம் திரு உத்​தரகோசமங்​கை​யில் உலகின் முதல் சிவாலயமாக கருதப்​படும் மங்​கள​நாத சுவாமி கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பச்சை மரகதக் கல்​லால் ஆன மரகத நடராஜருக்கு ஆண்​டு​தோறும் நடை​பெறும் ஆருத்ரா தரிசன விழா மிக​வும் சிறப்பு பெற்​றது. ஆருத்ரா தரிசனம் நடை​பெறும் தினத்​தன்று நடராஜர் சிலைக்கு சந்​தனக்​காப்பு சாத்​தப்​பட்​டு, ஆண்டு முழு​வதும் பாது​காக்​கப்​படு​கிறது.

இக்​கோயி​லில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ம் தேதி காப்​புக்​கட்​டு​தலுடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் காலை மூல​வர் நடராஜப் பெரு​மானுக்கு சந்​தனம்​படி களைதல் நடை​பெற்​றது. தொடர்ந்​து, 33 வகை​யான அபிஷேகங்​கள் நடை​பெற்​றன. அப்​போது, நடராஜர் சந்​தனக் காப்​பின்றி மரகத திரு​மேனி​யாய் காட்​சி​யளித்​தார். ஆண்​டில் ஒரு​நாள் மட்​டும் சந்​தனக் காப்​பின்றி நடராஜர் காட்​சி​யளிப்​ப​தால், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். இரவு 10 மணிக்கு கூத்​தர் பெரு​மான் கல்​தேர் மண்​டபம் எழுந்​தருளல் நிகழ்ச்சி நடை​பெற்​றது. நள்​ளிரவு வரை நடராஜரை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். தொடர்ந்​து, நள்​ளிரவு மூல​வர் நடராஜப் பெரு​மானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடை​பெற்​றது.

நேற்று (ஜன.3) அதி​காலை 4.30 மணி​யள​வில் அருணோதய காலத்​தில் நடராஜருக்கு சந்​தனக்​காப்பு சாத்​தப்​பட்​டு, ஆருத்ரா தரிசனம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, சோடச உபசார அலங்​கார தீபா​ராதனை நடை​பெற்​றது. காலை​யில் கூத்​தர் பெரு​மான் வீதி உலா​வும், மாலை​யில் பஞ்​சமூர்த்​தி​களுக்கு அபிஷேகம், இரவு மாணிக்​க​வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்​தல் நிகழ்ச்​சிகளும் நடை​பெற்​றன. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து நடராஜரை தரிசனம் செய்​தனர்.

SCROLL FOR NEXT