மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் கி.விட்டல் ராவ், அம்ஷன் குமார் ஆகியோருக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதை வழங்கினார். அருகில் கவிஞர் ரவிசுப்ரமணியன். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
இலக்கியம்

எழுத்தாளர்கள் விட்டல் ராவ், அம்ஷன் குமாருக்கு 2026-ம் ஆண்டின் மா.அரங்கநாதன் இலக்கிய விருது

செய்திப்பிரிவு

சென்னை: எழுத்தாளர்கள் விட்​டல் ராவ், அம்​ஷன் குமார் ஆகியோ​ருக்கு 2026-ம் ஆண்​டுக்​கான மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதுகளை, உச்ச நீதி​மன்ற நீதிபதி மகாதேவன் வழங்​கி​னார்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க. ம​காதேவனின் தந்​தை​யும், மறைந்த புகழ்​பெற்ற எழுத்​தாள​ரு​மான மா.அரங்​க​நாதனின் நினைவை போற்​றும் வகை​யில் ‘முன்​றில்’ இலக்​கிய அமைப்பு சார்​பில் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்​வோர் ஆண்​டும் ஏப்​ரல் 16-ம் தேதி மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழ் இலக்​கிய உலகின் சிறந்த ஆளு​மை​களை தேர்ந்​தெடுத்து இந்த விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்​த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான விருது வழங்​கும் விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்கு நீதிபதி மகாதேவன் தலைமை தாங்​கி, இந்த ஆண்​டுக்​கான விருதுகளை மூத்த எழுத்​தாளர், ஓவியர் மற்​றும் கலை விமர்​சகர் கி.​விட்​டல்ராவுக்​கும், எழுத்​தாளர், திரைப்​படத் தயாரிப்​பாளர் மற்​றும் ஆவணப்​படக் கலைஞரு​மான அம்​ஷன் குமாருக்​கும் வழங்கி கவுர​வித்​தார். விருதுடன் இரு​வருக்​கும் தலா ரூ.1 லட்​சத்​துக்​கான ரொக்​கப் பரிசும் வழங்​கப்​பட்​டது.

விழா​வில் நீதிபதி மகாதேவன் பேசி​ய​தாவது: கலாச்​சா​ரத்​தா​லும், பண்​பாட்​டாலும் தனித்​து​வ​மிக்​கது தமிழ்மண். இந்த மண்​ணின் பெருமை எடுத்து சொல்​வதற்கு அளவற்​றது.

இந்த தமிழ் மண்​ணின் மேதமை மிக்க எழுத்து ஆளுமை என்று விமர்​சகர்​களால் பாராட்​டப்​பட்ட அரங்​க​நாதனின் பெய​ரால் இன்​றைக்கு எழுத்​தாளர்​கள் விட்​டல் ராவ், அஷ்மன் குமார் ஆகியோ​ருக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

விட்​டல் ரா​வின் சிறுகதைகள் கணக்​கில் அடங்​காதவை. கட்​டுரை தொகு​தி​கள் கணக்​கில் அடங்​காதவை. அதே​போல் உலக திரைப்​படங்​களின் தன்​மை​யை, போக்கைஉணர்ந்​து, இந்த மண்ணை சார்ந்​தவர்​கள் நல்ல படைப்​பு​களை தர வேண்​டும் என்​கிற சிந்​தனையோடு, வணிக தன்மை இல்​லாமல் தன் பாதையை மாற்​றியமைத்த படைப்​பாளி அம்​ஷன் குமார்.

ஆவணப்​படங்​களை எவ்​வாறு எடுக்க வேண்​டும் என்றுபல்​வேறு இளைஞர்​களுக்கு இவர் கொடுத்த பயிற்சி நல்ல நல்ல ஆவணப்​படங்​களாக மாறி இன்று நிற்​கின்​றன. விருதுபெற்ற இரு​வருக்​கும் மனமார்ந்த வாழ்த்​துக்​கள்​ என்றார். இந்​நிகழ்​வில்​ கவிஞரும்​, ஆவணப்​பட இயக்​குநரு​மான ரவி சுப்​ரமணி​யம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT