வாழ்வியல்

உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு: 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

லண்டன்: இங்​கிலாந்​தில் இருந்து வெளிவரும் ‘தி லான்​செட்’ மருத்​துவ இதழில் வெளி​யாகி உள்ள ஆய்​வுக் கட்​டுரை​யில் இதுகுறித்து கூறி​யிருப்​ப​தாவது: உலகள​வில் மனநலம் தொடர்​பான பிரச்​சினை​களில் பாதிக்​கப்​படு​வோரின் எண்​ணிக்கை 120 கோடி​யாக உள்​ளது.

இது கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு 2 மடங்​காகும். இது​போன்ற பாதிப்பு பெண்​களிடம்​தான் அதி​க​மாகக் காணப்​படு​கிறது. அதே​நேரத்​தில் ஆட்​டிசம், கவனக் குறை​பாடு, ஆளுமை குறை​பாடு போன்​றவை ஆண்​களிடம் காணப்​படு​கின்​றன.

இதே​போல் கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு பதற்​றம் 158 சதவீத​மும், மனச்​சோர்வு அல்​லது மன அழுத்​தம் 131 சதவீத​மும் அதி​கரித்​துள்​ளது. இந்த பூமி​யில் 7 பேரில் ஒரு​வர் மனநல பாதிப்பில் வாழ்​கிறார்.

கரோனா தொற்​றுக்கு முன்பே பதற்​றம், மன அழுத்​தம் போன்​றவை அதி​க​மாக இருந்​தன. உலகள​வில் கரோனா காலத்​தி​லும், அதற்​குப் பிறகும் அந்​தப் பிரச்​சினை வேக​மாக அதி​கரித்​து​விட்​டது. அதன்​பிறகு பழைய நிலைக்கு வரவில்​லை.

அதி​லும் கடந்த 2023-ம் ஆண்​டு​தான் இந்​தப் பிரச்​சினை உச்ச கட்​டத்​தில் இருந்​துள்​ளது. குறிப்​பாக 15 வயது முதல் 19 வயதுள்ள இளைஞர்​கள்​தான் மனநலம் பாதிப்பு போன்ற பிரச்​சினை​களில் அதி​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இது​போன்ற பிரச்​சினை​களுக்கு உலகள​வில் மனநல சேவை​களை அதி​கரிப்பது மட்​டும் தீர்​வா​காது. வாழ்க்கை முறை​யில் தெரபி, தேவைப்​படும் நேரங்​களில் மருந்​துகள், உணவு, உடற்​ப​யிற்​சி, உறக்​கம், சமூக ஈடு​பாடு போன்ற மாற்​றங்​களை​யும் கொண்டு வரவேண்​டும்.

இவ்​வாறு லான்​செட் இதழில் கூறப்​பட்​டுள்​ளது. இந்த ஆய்​வுக் கட்​டுரை​யின் முதன்மை ஆசிரியர் டாக்​டர் டேமியன் சன்​டோமவ்ரோ கூறும்​போது, ‘‘இந்த அளவுக்​குப் பாதிப்பு இருப்​பதை அறிந்து உண்​மை​யிலேயே அதிர்ச்சி அடைந்​தேன்’’ என்று கூறி​யுள்​ளார். இவரது குழு​வினர் 12 பா​திப்​பு​கள் குறித்து விரி​வான ஆய்வு நடத்​தி தகவல்​களை வெளி​யிட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT