இந்தியா

மணிப்பூர் முதல்வராகிறார் யும்நம் கேம்சந்த் சிங் - முடிவுக்கு வருகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்​பூரில் இரண்​டாவது முறை​யாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்சி விரை​வில் முடிவுக்கு வரவுள்ள நிலை​யில் அம்​மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவின் யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி​யேற்க உள்​ளார்.

மணிப்​பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி, குகி சமூகத்​தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். பல மாதங்​களாக வன்​முறை நீடித்​த​தால் கடந்த 2025 பிப்​ர​வரி​யில் பாஜகவை சேர்ந்த முதல்​வர் பிரேன் சிங் பதவி வில​கி​னார்.

          

இதையடுத்து மணிப்​பூர் சட்​டப்​பேரவை முடக்கி வைக்​கப்​பட்​டு, அம்​மாநிலத்​தில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. பிறகு இது மேலும் 6 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டது. மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி பிப்​ர​வரி 12-ம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் மணிப்​பூர் பாஜக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் உடல்​ நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்ட இரு​வர் தவிர மற்ற அனைத்து எம்​எல்​ஏக்​களும் பங்​கேற்​றனர்.

இக்​கூட்​டத்​தில் மணிப்​பூர் பாஜக சட்​டப்​பேரவை கட்சி தலை​வ​ராக முன்​னாள் அமைச்​சர் யும்​நம் கேம்​சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரை​வில் இவர் மணிப்​பூர் முதல்​வ​ராக பதவி​யேற்க உள்​ளார். துணை முதல்​வ​ராக குகி சமூகத்தை சேர்ந்த முன்​னாள் பெண் அமைச்​ச​ரான நெம்சா கிப்​கென் பொறுப்​பேற்​பார்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT