புதுடெல்லி: டெல்லியில் குளிர்காலத்தில் மாசு அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. அதில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்றுவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாசு அளவுகள் உச்சத்தை எட்டும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பெட்ரோல் விநியோகத்துக்கும் வாகனங்கள் இயக்கத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.