இந்தியா

அசாமில் 25 ஆண்டாக செல்வாக்குடன் உள்ள காங். வேட்பாளர் பிதிஷாவை சமாளிப்பாரா முதல்வர் ஹிமந்தா?

செய்திப்பிரிவு

திஸ்புர்: அ​சாமில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மாவை எதிர்த்து பெண் வேட்​பாளர் பிதிஷா நியாக் என்​பவரைக் காங்​கிரஸ் கட்சி களமிறக்கி உள்​ளது. இதனால் கடந்த 25 ஆண்​டு​களாக சர்மா செல்​வாக்​குடன் உள்ள ஜலு​பாரி தொகு​தி​யில் இந்த முறை பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

அசாமில் உள்ள 126 தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​தத் தேர்​தலில் பாஜக சார்​பில் முதல்​வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆட்​சி​யைத் தக்க வைக்க தீவிர பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். இந்​நிலை​யில், அவர் போட்​டி​யிடும் ஜலு​பாரி தொகுதி இப்​போது அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. ஏனெனில், முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மாவை எதிர்க்க அரசி​யலில் அவ்​வளவு அனுபவமே இல்​லாத பெண் பிதிஷா நியாக் என்​பவரை காங்​கிரஸ் களமிறக்கி உள்​ளது.

          

ஜலு​பாரி​யில் ஹிமந்தா மக்​களிடம் மிகுந்த செல்​வாக்​குடன் இருக்​கிறார். கடந்த 2001 தேர்தலில் அசாம் கண பரிஷத்​தின் வேட்​பாள​ரும் செல்​வாக்​குள்ள அமைச்​சரு​மான பிரிகு குமார் புக்​கானை எதிர்த்து சர்மா வென்றார். அதன் பின் ஜலு​பாரியில் சர்​மா​வின் செல்​வாக்கு குறைய​வில்லை. இந்​தச் சூழ்​நிலை​யில்பிதிஷா​வால் தேர்​தலில் ஈடு​கொடுக்க முடி​யுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது. மேலும், கடந்த ஆண்​டு​தான் காங்​கிரஸ் கட்​சி​யில் பிதிஷா சேர்ந்​துள்​ளார்.

அரசி​யல் முன் அனுபவம் இல்​லா​விட்​டாலும், வீடு வீடாக வாக்கு சேகரிப்​பில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளார் பிதிஷா. இதனால் சர்​மாவுக்​குத் தேர்​தலில் கடும் போட்​டி​யாக பிதிஷா இருப்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதேவேளை​யில் முதல்​வ​ராக இருப்​பவரை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெறு​வது அவ்​வளவு எளிதல்ல என்​ப​தை​யும் அவர் உணர்ந்​துள்​ளார். இதுகுறித்து பிதிஷா கூறும்​போது, ‘‘சர்​மாவை எதிர்ப்​ப​தில் எனக்கு பயமில்​லை.

அசாம் மக்​கள் சகோ​தர, சகோ​தரி​களாக வாழ விரும்​பு​கின்​றனர். வளர்ச்​சி​யை, அமை​தியை விரும்​பு​கின்​றனர். அவர்​களு​டைய கனவை நிறைவேற்ற பாடு​படு​வேன்’’ என்​கிறார் பிதிஷா.

SCROLL FOR NEXT