இந்தியா

பாகிஸ்தான் தூதரகத்தில் பாதுகாப்பு தடுப்பு அகற்றம் ஏன்? - மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சாணக்​கியபுரி​யில் பாகிஸ்தான் நாட்​டின் தூதரகம் அமைந்​துள்​ளது. அதன் வளாகத்​தில் விசா வழங்​கும் பகுதி​யில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. அந்த தடுப்​பு​கள் நேற்று முன்​தினம் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் தூதரகத்​தின் முன்​பாக செங்​கற்​கள், கான்​கிரீட் கலவை​யால் கட்​டப்​பட்டு இருந்த தடுப்​புச் சுவரும் இடித்து தள்​ளப்​பட்​டது.

தூதரகத்​தின் பாது​காப்பு தடுப்​பு​கள் மற்​றும் சுவர் சாலையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்​த​தால் இடித்து அகற்​றப்​பட்​ட​தாக டெல்லி அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இந்​நிலை​யில், பாகிஸ்​தானின் செயலுக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாகவே அதன் தூதரகத்​தின் பாது​காப்பு தடுப்​பு​கள் இடித்து அகற்​றப்​பட்​ட​தாக மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

டெல்​லி​யில் நேற்று பத்​திரிக்​கை​யாளர்​களை சந்​தித்த மத்​திய வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்தி தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்ஸ்வால் கூறிய​தாவது: பாகிஸ்​தான் தலைநகர் இஸ்லாமாபாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் முன்பு இருந்த பாது​காப்பு தடுப்​பு​கள் சமீபத்​தில் இடித்து அகற்​றப்​பட்​டன.

பாது​காப்பு தடுப்​பு​களை அகற்ற வேண்​டாம் என நாம் கோரிக்கை வைத்​த​போ​தி​லும் அந்த நாட்டு அரசு அதை கண்​டு​கொள்​ளாமல் தடுப்​பு​களை இடித்து அகற்​றியது. அதற்கு எதிர்​வினை​யாற்​றும் வித​மாகவே டெல்​லி​யில் பாகிஸ்​தான் தூதரகத்​தின் முன்பு இருந்த தற்​காலிக கட்​டமைப்​பு​கள் இடித்து அகற்​றப்​பட்​டன. இவ்​வாறு ரந்தீர்​ ஜெய்​ஸ்​வால்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT