ராகவ் சத்தா

 
இந்தியா

அதிருப்தியால் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறினோம்: பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 எம்​.பி.க்​கள் இருந்​தனர். அவர்​களில் ராகவ் சத்​தா, சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், சுவாதி மாலி​வால், ஹர்​பஜன் சிங், ராஜீந்​தர் குப்​தா, விக்​ரம்​ஜித் சிங் சாஹ்னி ஆகிய 7 எம்.​பி.க்​கள் பாஜக​வில் இணைந்துள்​ளனர். இதுதொடர்​பாக ராகவ் சத்தா நேற்று கூறிய​தாவது:

அச்ச உணர்​வின் காரண​மாக ஆம் ஆத்​மி​யில் இருந்து விலகியிருப்​ப​தாக அந்த கட்சி தலை​வர்​கள் கூறி வரு​கின்​றனர். நாங்​கள் அச்ச உணர்​வால் வில​க​வில்​லை. ஆம் ஆத்மி மீதான அதிருப்​தி, விரக்​தி, வெறுப்​புணர்வு காரண​மாக அந்தக் கட்​சி​யில் இருந்து வெளி​யேறி உள்​ளோம். ஆடம்பர மாளிகை விவ​காரம் (கேஜ்ரிவால் வசித்த டெல்லி வீடு) காரண​மாக ஆம் ஆத்மி மீதான நன்​ம​திப்பு குறைந்து உள்​ளது. இதன் காரண​மாகவே கடந்த டெல்லி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அந்த கட்சி மோச​மான தோல்வியை தழு​வியது. தற்​போது 2-வது ஆடம்பர மாளிகை (கேஜ்ரி​வாலின் தற்​போதைய வீடு) விவ​காரம் அம்​பல​மாகி உள்ளது. இந்த விவ​காரம் குறித்து ஆம் ஆத்மி சுயபரிசோதனை செய்து கொள்​வது அவசி​யம்.

கட்​சி​யின் ஒவ்​வொரு தொண்​டரும் ரத்​தம், வியர்வை சிந்தி மிகக் கடின​மாக உழைத்​தனர். கட்சி தலை​மை​யிடம் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்​திருந்த அவர்​கள் தற்​போது அடுத்​தடுத்து வெளி​யேறி வரு​கின்​றனர். உண்​மையை சொல்​வதென்​றால் ஆம் ஆத்மி தவறான பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. அந்​தக் கட்​சி​யில் யாரும் நீடித்து நிலைத்​திருக்க விரும்​ப​வில்​லை.

ஒரு கட்​சி​யில் ஊழல் அதி​கரித்தால் அந்த கட்​சி​யின் எம்​பிக்​கள் அணி மாற அரசி​யலமைப்பு சட்​டத்​தில் இடம் உள்​ளது. இதன் காரண​மாகவே ஆம் ஆத்​மி​யில் இருந்து ஒரே நேரத்​தில் 7 எம்பிக்கள் வெளி​யேறி உள்​ளோம். மாநிலங்​களவை​யில் நாங்​கள் தனி அணி​யாக செயல்​படு​வோம். பாஜக​வுக்கு இணக்​க​மாக செயல்​படு​வோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT