இந்தியா

நினைவு நாளையொட்டி பாரதியார், இமானுவேல் சேகரனார் படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் மலர்தூவி மரியாதை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ம​காகவி சுப்பி​ரமணிய பாரதியார், தியாகி இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவு நாளை​யொட்​டி, குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில் அவர்​களின் உரு​வ படத்​துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் மலர் தூவி மரி​யாதை செலுத்தி​னார்.

பின்​னர் அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியுள்ளதாவது: தம் வாழ்​நாளைத் தேசப் பணிக்​கும் தமிழ்த் தொண்​டுக்​கும் அர்ப்​பணித்த பாரத அன்​னை​யின் தவப்​புதல்​வர், பாட்​டு புல​வன் மகாகவி சுப்​பிரமணிய பார​தி​யார்.

‘செப்​பு மொழி பதினெட்​டுடை​யாள் எனில் சிந்​தனை ஒன்றுடையாள்’ என்று பல்​வேறு மொழிகளை நாம் பேசி​னாலும், சிந்​தனை​யால் ஒன்​று​பட்ட மகத்​தான தேசத்​தினுடைய குடிமக்​கள் என்​பதை ஓங்கி உரைத்த மகாகவி பார​தி​யார் போல இன்​னொரு மாபெரும் புல​வன் பிறந்து வரு​வதற்கு இன்​னும் எத்​தனை யுகம் எடுக்​கும் என்​பது நமக்​குத் தெரி​யாது. தேசப்​பற்​று, சமத்​து​வம், பெண்கள் முன்​னேற்றம் ஆகியவற்றை தம் கவிதைகளால் எடுத்துரைத்த பார​தி​யாரின் நினை​வைப் போற்​று​வோம்.

தியாகி இமானுவேல் சேகரனார் ஒரு மகத்தான மாமனிதர். சாதிகளால் ஒருவரை ஒருவர் உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதி வாழக் கூடாது என்கின்ற சமநீதியை நிலைநாட்ட தன் உயிரைத் தந்தவர். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்​.

SCROLL FOR NEXT