இந்தியா

ஜம்மு - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்​மு - ஸ்ரீநகர் இடையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஜம்மு காஷ்மீரில் கட்​டப்​பட்ட உலகின் மிக உயர​மான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஜூனில் தொடங்​கி​ வைத்​தார்.

அப்​போது காஷ்மீரின் கத்​ரா​வில் இருந்து ஸ்ரீநகர் வரையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இந்த சூழலில் ஸ்ரீநகர் செல்​வதற்​காக ஜம்மு வந்து சேரும் சுற்​றுலாப் பயணி​கள் அங்​கிருந்து கத்ரா சென்ற பிறகே ரயில் சேவையை பயன்​படுத்த முடி​யும் சூழல் இருந்​தது. இதற்கு தீர்வு காணும் வகை​யில் ஜம்மு தாவி ரயில் நிலை​யத்​தில் இருந்து கத்ரா வரை தண்​ட​வாளம், சிக்​னல் தொழில்​நுட்​பங்​கள் மேம்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஜம்​மு​தா​வி-ஸ்ரீநகர் இடையி​லான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஜம்​மு​ தாவி ரயில் நிலையத்​தில் நடந்த விழா​வில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்​துல்​லா, மத்திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: பூஞ்ச்​-ரஜோரி- உரி பகு​தி​களுக்​கும் ரயில் கட்​டமைப்பு விரிவுபடுத்​தப்​படும். இதற்​கான திட்ட அறிக்​கைகள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. விரை​வில் பணி​கள் தொடங்​கப்​படும். கடும் குளிர் காலங்​களி​லும் காஷ்மீரில் ரயில் சேவை எவ்​வித பாதிப்​பும் இன்றி இயக்​கப்​படும். அதற்கு தேவை​யான அனைத்து தொழில்​நுட்ப வசதி​களும் செய்​யப்​பட்டு உள்​ளன.

சரக்கு ரயில் போக்​கு​வரத்​தால் காஷ்மீரில் சிமென்ட் விலை ஒரு மூட்​டைக்கு ரூ.50 குறைந்​திருக்​கிறது. இங்​கிருந்து 20,000 டன் ஆப்​பிள்​கள் ரயில் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். வந்தே பாரத் ரயி​லில் பயணம் செய்த நதீம் அகமது லோகர் கூறும்​போது, “ஜம்​மு- ஸ்ரீநகர் நெடுஞ்​சாலை பனிப்​பொழிவு மற்​றும் நிலச்​சரிவு காரண​மாக அடிக்​கடி மூடப்​படும்.

தற்​போது வந்தே பாரத் ரயி​லால் அனைத்து காலசூழ்​நிலைகளி​லும் எளி​தாக பயணம் மேற்​கொள்​கிறோம். இதற்​காக மத்​திய அரசுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோண்” என்​றார். மற்​றொரு பயணி அனு குப்தா கூறும்​போது, “வந்தே பாரத் ரயி​லில் ஜம்​மு​தா​வி​யில் இருந்து சுமார் 4 மணி நேரத்​தில் ஸ்ரீநகரை சென்​றடைந்​து​விட்​டோம். இதன்​மூலம் நேர​மும் பணமும் மிச்​ச​மாகிறது. காஷ்மீரின் சுற்​றுலா மேம்​படும்” என்று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT