அமெரிக்க தூதர் செர்கியோ கோர்

 
இந்தியா

ட்ரம்ப் - மோடி இடையிலான நட்பு உண்மையானது: அமெரிக்க தூதர் செர்கியோ கோர் விவரிப்பு

“இந்தியாவை விட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை”

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வை​விட முக்​கிய​மான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை என்​று இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா குறைத்​துக் கொள்ள வேண்​டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதை ஏற்க மறுத்த நிலையில், இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது. இதனால் இரு நாடு​களுக்​கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, அதிபர் ட்ரம்பை சந்​திப்​பதை பிரதமர் மோடி தவிர்த்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக​ நியமிக்கப்பட்​டிருந்த செர்​கியோ கோர் டெல்​லி​யில் உள்ள அலுவல​கத்​தில் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது: “நான் அதிபர் ட்ரம்ப் உடன் உலகம் முழு​வதும் பயணம் செய்​துள்​ளேன். பிரதமர் மோடி​யுட​னான அவரது நட்பு உண்​மை​யானது. உண்​மை​யான நண்​பர்​களுக்கு இடையே கருத்து வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால் இறு​தி​யில் அவர்​கள் அந்த வேறு ​பாடு​களை பேசித் தீர்த்​துக்​கொள்​வார்​கள்.

இரு நாடு​களுக்​கும் இடையி​லான உறவை அடுத்​த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வதே எனது நியமனத்​தின் நோக்​கம். மேலும் அடுத்த ஆண்டில் ட்ரம்ப் இந்​தி​யா​வுக்கு வரு​வார் என்று நம்புகிறேன். இந்​தி​யாவை விட முக்​கிய​மான நட்பு நாடு வேறு எதுவும் இல்​லை. இந்​தியா உலகின் மிகப்​பெரிய நாடு (மக்​கள் தொகை​யில்).

எனவே, இரு நாடு​களுக்​கு இடையி​லான தாராள வர்த்தக ஒப்​பந்​தத்தை வெற்​றிகர​மாக முடிப்​பது எளி​தான காரி​யம் அல்ல. இருப்பினும், இந்த ஒப்​பந்​தத்தை வெற்​றிகர​மாக இறு​திக் ​கட்டத்துக்கு கொண்டு செல்​வ​தில் இரு நாடு​களும் உறு​தி​யாக உள்ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT