இந்தியா

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா செயல்படாத பிரச்சினைக்கு 2 வாரத்தில் தீர்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​காவல் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் செயல்ப​டாதது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்​துள்​ளது. நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய உள்​துறை செயலர் கோவிந்த் மோகன் ஆஜரா​னார்.

மத்​திய அரசின் தலைமை வழக்​கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியிடம், "இந்த விவ​காரத்​தில் மாநிலங்​கள், யூனியன் பிரதேச பிர​தி​நி​தி​களு​டன் கலந்து ஆலோ​சிப்​ப​தற்கு மத்திய உள்​துறை உதவிச்​செயலரை அனுப்​புவது நல்​ல​தா" என்று நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர்.

          

மேலும் கேரள மாதிரியை ஏன் அனைத்து மாநிலங்​களும் பின்பற்றக்​கூ​டாது என்​றும் கேள்வி கேட்​டனர். இதற்கு மத்​திய அரசின் தலைமை வழக்​கறிஞர் ஆர். வெங்​கட்​ரமணி, "மத்​திய உள்​துறை செயலர் தலை​மை​யில் ஒரு வாரத்​துக்​குள் மீண்​டும் சிறப்பு கூட்​டம் நடத்​தப்​படும்" என்றார்.

இதையடுத்து நீதிப​தி​கள், "சிசிடிவி கேம​ராக்​களை காவல் நிலையங்​களில் பொருத்​தும் விவ​காரத்​தில் உள்ள பிரச்​சினை​கள் 2 வாரத்​துக்​குள் களை​யப்​படும் என்று மத்​திய அரசு உறுதியளித்துள்​ளது" என்​றனர்​.

SCROLL FOR NEXT