இந்தியா

நடிகை ட்விஷா மரணம்: சிபிஐ விசாரணையில் மாமியாரின் வரதட்சணை கொடுமை அம்பலம்

ரூ.20 லட்சம் பங்குகளை தனது பெயருக்கு மாற்ற வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

போபால்: நடிகை ட்விஷா​விடம் இருந்த ரூ.20 லட்​சம் மதிப்பு பங்குகளை தனது பெயருக்கு மாற்ற மாமி​யார் கிரி​பாலா சிங் வற்புறுத்தி இருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்​தவர் ட்விஷா சர்​மா. கடந்த 2012-ல் ‘‘மிஸ் புனே’’ பட்​டம் வென்ற அவர் சில தெலுங்​கு, இந்தி படங்​களில் நடித்​தார். பல நிறு​வனங்​களுக்கு விளம்பர மாடலாக பணி​யாற்​றி​னார். திரை​யுல​கில் தொடர்ந்து முன்​னேற முடி​யாத நிலை​யில் மும்​பை, டெல்​லி​யில் உள்ள கார்ப்​பரேட் நிறுவனங்களில் மார்க்​கெட்​டிங் மேலா​ள​ராகப் பணி​யாற்​றி​னார்.

கடந்த 2024-ல் ம.பி. தலைநகர் போபாலைச் சேர்ந்த வழக்​கறிஞர் சமர்த் சிங்குடன் அவருக்கு பழக்​கம் ஏற்​பட்​டது. 2025-ம் ஆண்டு இறு​தி​யில் இரு வீட்​டாரின் சம்​மதத்​துடன் ட்விஷா சர்​மா, சமர்த் சிங் திரு​மணம் நடை​பெற்​றது. ட்விஷா​வின் மாமி​யார் கிரி​பாலா சிங் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். திரு​மணத்​தின் போது பெண் வீட்​டாரிடம் இருந்து அவர் சில லட்​சங்​களை வரதட்சணையாகப் பெற்​றார். சில மாதங்களுக்கு முன்பு ட்விஷா கர்ப்பமானார். ஆனால் அவரது நடத்தையில் சந்​தேகப்​பட்ட கணவர் சமர்த் சிங்கும், மாமியார் கிரி​பாலா சிங்​கும் கருவை கலைக்க வற்புறுத்தினர்.

அவர்​களின் ஏற்​பாட்​டின்​பேரில் ட்விஷாவுக்கு வலுக்​கட்​டாய​மாக கருக்​கலைப்பு நடை​பெற்​றது. இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி போபாலில் உள்ள கணவர் வீட்​டில் அவர் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். போதை பழக்​கம் மற்​றும் மனநல பாதிப்பு காரண​மாக ட்விஷா தற்​கொலை செய்து கொண்ட​தாக கணவர் வீட்​டார் வாதிட்​டனர். ஆனால் அவரது மரணத்​தில் சந்​தேகங்​கள் இருப்​ப​தாக பெற்​றோர் குற்​றம் சாட்டினர். ட்விஷா குடும்​பத்​தினரின் போராட்​டத்​தால் வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டது.

சிபிஐ விசா​ரணை​யில் கணவர் வீட்​டாரின் பல்​வேறு வரதட்​சணை கொடுமை​கள் அடுத்​தடுத்து அம்​பல​மாகி வரு​கின்​றன. இதன்​காரண​மாக நேற்று முன்​தினம் மாமி​யார் கிரி​பாலா சிங் கைது செய்​யப்​பட்​டார். ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்ட கணவர் சமர்த் சிங் சிறை​யில் உள்​ளார். இரு​வரும் போபாலில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். இரு​வரை​யும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்கியது.

இந்த வழக்கு குறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: திரு​மணத்​தின்​போதே ட்விஷா​வின் குடும்​பத்​தினரிடம் இருந்து கணவர் வீட்​டார் சில லட்​சங்​களை வரதட்​சிணை​யாக பெற்று உள்ளனர். திரு​மணத்​துக்​குப் பிறகு ட்விஷா​வின் பெயரில் இருந்த ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள பங்​கு​களை தங்​களது பெயர்​களுக்​கு மாற்ற கணவர் சமர்த் சிங்​கும் மாமி​யார் கிரி​பாலா​வும் தொடர்ந்து வற்​புறுத்தி வந்து உள்​ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வர்​கள் நடத்​திய 2-வது பிரேதபரிசோதனை​யில் ட்விஷா​வின் உடலில் 6 இடங்​களில் காயங்​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டன. அவரது தலை, வலது கை, விரல்​களில் காயங்​கள் இருந்​தன. இவை அவரது மரணத்​துக்கு முன்​பாக ஏற்​பட்ட காயங்​கள் என்று பிரேத பரிசோதனை நடத்​திய மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.மத்​திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் முதலா​வது பிரேத பரிசோதனை நடந்​த​போது கிரி​பாலா சிங்​கின் நெருங்​கிய உறவினர்​களான 2 மூத்த மருத்​து​வர்​கள் உடன் இருந்​துள்​ளனர்.

இது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது. சிசிடிவி கேமரா உட்பட பல்​வேறு முக்​கிய ஆதா​ரங்​கள் அழிக்​கப்​பட்டு உள்​ளன. ஓய்வு பெற்ற நீதிப​தி​யான கிரி​பாலா சிங் பல்​வேறு இடங்​களில் தனது செல்​வாக்கை பயன்​படுத்​தி உள்​ளார்​. அவரிடம்​ தீவிர விசாரணை நடத்​தப்​படு​கிறது. இந்​த வழக்​கில்​ மறைந்​துள்​ள உண்மை​கள்​ விரை​வில்​ வெளிச்​சத்​துக்​கு கொண்​டு வரப்​படும்​. இவ்​​வாறு சிபிஐ வட்​​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT