இந்தியா

டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? - கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் பாஜகவை அணுக முயற்சி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் ஆட்​சியை இழந்த திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் (டிஎம்​சி) சிலர் பாஜகவை அணுக முயற்​சிப்​ப​தாகத் தெரி​கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்​சி​யைப் போல் திரிண​மூல் கட்சி மாறுகிறதா என்ற கேள்வி தற்​போது எழுந்​துள்​ளது.

டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்​சித் தலைமை மீது முக்​கி​யத் தலைவர்கள் பலர் அதிருப்​தி​யில் இருந்​தனர். அதனால், ஆம் ஆத்மி​யின் 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் ராகவ் சத்தா தலைமையில் திடீரென பாஜக​வில் இணைந்​தனர். அதே நிலை மேற்கு வங்​கத் தேர்​தல் தோல்விக்​குப் பிறகு டிஎம்​சி​யில் உட்​கட்​சிப் பூசல் அதி​கரித்​துள்​ளது. முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்ஜியின் மரு​மகன் அபிஷேக் பானர்​ஜிக்கு எதி​ராகக் கட்சிக்குள் ஒரு பிரி​வினர் வெளிப்​படை​யாக எதிர்ப்​புக் குரல் எழுப்பத் தொடங்​கி​யுள்​ளனர்.

வேட்​பாளர் தேர்​வில் அபிஷேக் தன்​னிச்​சை​யாகச் செயல்பட்டதாக​வும் அரசு நிர்​வாகத்​தி​லும் இப்​பிரி​வினர் அதிருப்தி அடைந்திருந்​தனர். இதன் காரண​மாகவே, டிஎம்​சி​யின் நாடாளு​மன்ற எம்.பி.க்​களான ககோலி கோஷ் தஸ்​தி​தார், பராசத் மாவட்​டத் தலை​வர் மற்​றும் பல சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கட்சி ஆலோ​சனைக் கூட்​டங்​களில் கலந்து கொள்​ள​வில்​லை. இதனால் அதிருப்தி தலை​வர்​கள் பலர், பாஜக​வுடன் தொடர்​பில் இருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

எனினும், அவர்​களை இணைத்​துக் கொள்​வது குறித்​து, அவரசரப்ப​டா​மல் நிதான​மாக முடிவு எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு டிஎம்சி தொண்​டர்​களை சேர்க்க பாஜக தற்​காலிகத் தடை விதித்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 13 எம்.பி.க்களும், மக்​களவை​யில் 28 எம்​.பி.க்​களும் உள்​ளனர். இவர்கள் தேர்​தல் முடிவு​கள் சாதக​மாக அமை​யாத நிலை​யில், கட்சிக்​குள் இனி எதிர்​காலம் இல்லை என்று கருதுகின்​றனர்.

இதை சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொண்டு மாநிலங்களவையில் தனிப்​ பெரும்​பான்​மை​யைப் பெற, டிஎம்சி மாநிலங்​களவை எம்​.பி.க்​களைச் சேர்ப்​ப​தைத் தவிர பாஜக.வுக்கும் வேறு வழி​யில்​லை. மாநிலங்​களவை​யில் பெரும்பான்​மைக்கு 113 எம்​.பி.க்​கள் தேவை. தற்​போதைக்​குப் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்சிகளை எல்​லாம் சேர்த்​தால், மாநிலங்​களவை​யில் பெரும்பான்மை பலம் உள்​ளது.

டிஎம்சி எம்​.பி.க்​கள் இணைந்​தால், பாஜக.வுக்​கேத் தனிப்​பெரும்பான்மை கிடைக்க வாய்ப்​புள்​ளது. இது நடந்​தால் மகளிர் இட ஒதுக்​கீட்டை அமலாக்க பாஜக மீண்​டும்​ முயற்​சி செய்​யும்​ என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT