இந்தியா

பாரம்பரிய மருத்துவம் உரிய அங்கீகாரம் பெறவில்லை: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரம்​பரிய மருத்​து​வம் குறித்த உலக சுகா​தார அமைப்​பின் உலகளா​விய உச்சி மாநாடு டெல்​லி​யில் கடந்த 17-ம் தேதி தொடங்​கியது.

இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பேசுகையில், ‘‘பாரம்​பரிய மருத்​து​வத்​திற்கு உரிய அங்​கீ​காரம் இன்​னும் கிடைக்​க​வில்​லை. அதன் பயன்​பாட்டை விரிவுபடுத்த அறி​வியலின் மூலம் மக்​களின் நம்​பிக்​கையை வென்​றெடுக்க வேண்​டும்’’ என்றார்.

பிரதமர் மோடி, ‘ஆயுஷ் ஒருங்​கிணைந்த சேவை போர்​டல்' உட்பட பல முக்​கிய ஆயுஷ் திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ஆயுஷ் தயாரிப்​பு​கள் மற்​றும் சேவை​களின் தரத்​துக்​கான ஆயுஷ் முத்​திரையை வெளி​யிட்​டார்.

யோகா பயிற்​சி​யில் உலக சுகா​தார அமைப்​பின் தொழில்​நுட்ப அறிக்கை மற்​றும் ஆயுஷ் மருத்​து​வத்​தில் 11 ஆண்​டு​கால மாற்​றம் என்ற புத்​தகத்தை பிரதமர் மோடி வெளி​யிட்​டார். அஸ்​வகந்தா குறித்த நினைவு அஞ்​சல்​ தலை​யை​யும்​ அவர்​ வெளி​யிட்​டார்​.

SCROLL FOR NEXT